வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் : ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

                                            மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்
கோரி வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள்பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, புதுக்கோட்டை, சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல்உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய
இடங்களில் மறியலிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்ட  ஆசிரியர்கள்ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை   சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த 120 பெண்கள் உள்பட மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக