திங்கள், 30 செப்டம்பர், 2013

எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி.,கணிதத்திற்கு இணையானது' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது

    எம்.எஸ்சி., புள்ளியியல்படித்தவர்களுக்கு, அரசு பணிகளில், பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பு கிடையாது. அதுவே, எம்.எஸ்சி.,யில், இதர பாடங்களை எடுத்து படிப்பவர்கள், அரசு பள்ளிகளில், ஆசிரியர்பணி வாய்ப்பை பெறுகின்றனர். இந்நிலையில், எம்.எஸ்சி.,புள்ளியியல் படித்தவர்களும், அரசு பணி வாய்ப்பை அதிகளவில் பெறும் வகையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை, வெளியிட்டுள்ளது. அதன்படி,                            சென்னைபல்கலை வழங்கும் எம்.எஸ்சி.,புள்ளியியல் படிப்பு,    எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது என்றும், அரசு பள்ளிகளில்,முதுகலை ஆசிரியர்களாக பணி வாய்ப்பு பெறுவதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
                          
                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக