வியாழன், 24 அக்டோபர், 2013

12 மற்றும் 10ம்வகுப்புதனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

 பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் அடங்கிய 
மதிப்பெண் பட்டியல் நாளை முதல், 30ம் தேதி வரை, மாணவர்
தேர்வெழுதிய மையங்களில் வினியோகிக்கப்படும், என,
தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வை, 40 ஆயிரம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை,
50 ஆயிரம் பேரும் எழுதினர். இதற்கான
மதிப்பெண் சான்றிதழ்களை, அவரவர் தேர்வெழுதிய
மையங்களுக்கு, நேரில் சென்று, மதிப்பெண்
பட்டியலை பெற்றுக் கொள்ளலாம் எனவும்,
தேர்வு முடிவு, இணையதளத்தில்
வெளியிடப்படமாட்டாது எனவும், இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, பிளஸ் 2
தனித்தேர்வு மதிப்பெண் பட்டியல், டிச., 17ம் தேதியும்,
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கடந்த ஜனவரி, 2ம்
தேதியும்வழங்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு, இரு மாதங்கள்
முன்கூட்டியே, தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது. மேலும்,
 கடந்த ஆண்டு வரை,
தேர்வு முடிவு ஒரு தேதியிலும், மதிப்பெண் பட்டியல்,
ஒரு தேதியிலும் வழங்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு,
இரு தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியலும்,
ஒரே நேரத்தில், வழங்கப்படுகின்றன. தேர்வுத் துறையில்,
சமீபத்தில் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால்,
தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட முடிந்ததாக,
தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தனித்தேர்வுகளின் விடைத்தாள் நகல் பெறுதல் மற்றும்
மறுகூட்டல் ஆகியவற்றிற்கு,
விண்ணப்பம் செய்வது குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்
என, இயக்குனர் தெரிவித்துள்ளார்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக