வியாழன், 17 அக்டோபர், 2013


பிளஸ் 2, 10ம் வகுப்புதனித்தேர்வு முடிவு விரைவில் வெளியீடு 
தனித்தேர்வு முடிவை, இம்மாத இறுதிக்குள் வெளியிட, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.     பிளஸ் 2, 10ம் வகுப்பு தனி தேர்வு, சமீபத்தில் நடந்தது. பிளஸ் 2 தேர்வை, 40 ஆயிரம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 50 ஆயிரம் பேரும் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி,தலா, நான்கு மையங்களில் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள், இந்த வார இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும், மாத இறுதிக்குள், தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும்,தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக