வெள்ளி, 22 நவம்பர், 2013

8–வது வகுப்பு மாணவர்கள்: உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் நாளை (22.11.2013) வெளியீடு

தமிழ்நாட்டில் 8–வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 9–வது முதல் பிளஸ்–2 வரை உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. உதவித்தொகை வழங்குவதற்காக தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு (NMMS) தேர்வு கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. தேர்வில் 6,700 மாணவர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற, தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை 23ம் தேதி,  (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வாளர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tndge.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த தேர்வில், 6,700 பேர், தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாணவர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 1,500 ரூபாய் வீதம், பிளஸ் 2 வரை, உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகையை, மத்திய அரசு வழங்குகிறது. தேர்வு நடந்து, ஒரு ஆண்டு முடியும் நிலை உள்ளது என்றாலும், இந்த ஆண்டிற்கான உதவித்தொகை, சம்பந்தபட்ட மாணவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக