திங்கள், 25 நவம்பர், 2013

தேசிய திறனாய்வு தேர்வின் (என்.டி.எஸ்.சி,) முதல் நிலை தேர்வை, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.

 ஒன்பதாம் வகுப்பில், 60 சதவீதம் பெற்ற, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய திறனாய்வு தேர்வை, தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் மாதம், ரூ.500ம், இளங்கலை பட்டப்படிப்பின் போது, மாதம் 1,000 ரூபாயும், முதுகலை பட்டப்படிப்பின் போது, மாதம் 2,000 ரூபாயும், எம்.பில்., பிஎச்.டி., படிக்கும் போது மாதம் 3,000 ரூபாயும், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
 இதற்கான முதல் நிலை தேர்வை, மாநில அரசும் (பள்ளி கல்வித் துறை), இரண்டாம் நிலை தேர்வை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகமும் நடத்துகிறது. இந்த தேர்வுகளில் பாடங்களுடன், மனத்திறன் தொடர்பான கேள்விகளும் கேட்கப்படுகின்றன.தமிழகத்தில் முதல் நிலை தேர்வு, நேற்று நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த, 251 மையங்களில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வரை தேர்வு எழுதினர்.
சென்னையை பொறுத்தவரை, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேர்வில், அரசு பள்ளி மாணவர்களை காட்டிலும், தனியார் மெட்ரி"க் பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இதில் தேர்ச்சி பெறுவோர், வரும், 2014ம் ஆண்டு, மே மாதம் நடத்தப்படும் இரண்டாம் நிலை தேர்வை எழுதுவர். இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெறுவோர், மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற தகுதி பெறுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக