திங்கள், 25 நவம்பர், 2013

கடலூர், ஏ.ஆர். எல்.எம்., பள்ளி மாணவி அஜிதாவுக்கு தேசிய குழந்தை சாதனையாளர் விருது

கடலூர், .ஆர்.எல். எம்., பள்ளி மாணவி அஜிதா. சிறு வயது முதலே யோகா பயிற்சியில் கவனம் செலுத்தி, மாவட்ட, மாநில, தேசிய மற்றும் உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்துள்ளார்.

சமீபத்தில் ரஷ்யா தலைவர் மாஸ்கோவில் நடந்த அகில உலக யோகா கூட்டமைப்பு நடத்திய 24வது உலக யோகா போட்டியில் பங்கேற்று ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார்.இவரது சாதனைகளைக் கவுரவிக்கும் வகையில், இந்த ஆண்டிற்கான தேசிய குழந்தை சாதனையாளர் விருது வழங்கியுள்ளது.

டில்லியில் நடந்த விழாவில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் கிருஷ்ணடிரத், மாணவி அஜிதாவிற்கு வெள்ளிப்பதக்கம், 10 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார். இந்தாண்டு மொத்தம் 36 சிறுவர், சிறுமியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதில், தமிழகம் சார்பில் விருது பெற்றவர் அஜிதா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக