சனி, 30 நவம்பர், 2013

TRB PG TAMIL: HEARING ON MONDAY (02.12.13)

முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டதுஇந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்
. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் விதித்து  வழக்கினை.தனி  நீதிபதியின் தீர்ப்புக்கு நீதியரசர்கள்  எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை ஒத்திவைத்தது.

அவ் வழக்கு .மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமை நீதிபதி மற்றும் நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் 21.11.2013  அன்று விசாரணைக்கு வந்தது.
முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தேர்வெழுதிய இரு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் தாழைமுத்தரசு ஆஜராகி  தங்கள் தரப்பு கருத்துக்களை எதிர்மனுவாக தாக்கல் செய்தார் .ஆனால் TRB சார்பில் அட்வகேட் ஜெனரல் அன்று ஆஜராக இயலாததால் வழக்கினை ஒத்திவைக்க கோரியதன்பேரில் வழக்கின் அடுத்த விசாரணையை 28.11.2013 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் .பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் வழக்குவிசாரணை  28.11.2013 அன்றும் நடைபெறவில்லை.
எதிர் மனுதாரர்கள்  அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரும் 02.12.2013 அன்று அவ்வழக்கு நீதி அரசர்கள் ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணக்கு வருகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்டத்தை முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுதியுள்ள  அனைவரும் மிகுந்த பரபரப்புடன் எதிர் நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக