சனி, 23 நவம்பர், 2013

TRB PG TAMIL NEWS UPDATE :மேல்முறையீட்டு விசாரணை

முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டதுஇந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்
. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் .தனி  நீதிபதியின் தீர்ப்புக்கு நீதியரசர்கள்  எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை விதித்து  வழக்கினை ஒத்திவைத்தது

அவ்வழக்கு  சென்றவாரம்  21.11.2013 அன்று தலைமை நிதிபதி நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. TRB சார்பில் அட்வகேட் ஜெனரல் இன்று அஜராக இயலாததால் வழக்கினை ஒத்திவைக்க கோரியதன் பேரில் வழக்கின் அடுத்த விசாரணையை 28.11.2013 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் .
தற்போதைய தகவலின்படி வழக்கு விசாரணை மீண்டும் 28.11.2013 வரும் நிலையில் அவ்வழக்கு நீதியரசர்கள்  எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என தெரியவருகின்றது. அன்று அரசு மற்றும்  அனைத்து .எதிர்மனுதாரர்களின் நிலைப்பாடும் தெரியவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக