திங்கள், 30 டிசம்பர், 2013

நெட்' தேர்வு: 15 ஆயிரம் பேர் பங்கேற்பு


 கல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப்பேராசிரியர் பணியிடத்துக்கான, யு.ஜி.சி.,யின்
தேசிய தகுதித் தேர்வு (நெட்) நேற்று நடந்தது. கல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப்பேராசிரியர் பணிக்கு, யு.ஜி.சி., சார்பில், தேசிய தகுதித்
தேர்வு (நெட்) நடத்தப்படுவது வழக்கம். ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இதில், 2 ம் கட்ட நெட் தேர்வு நேற்று நடந்தது. சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ், ஜானகி எம்.ஜி.ஆர்., கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட, 13 மையங்களிலும், தமிழகத்தில், 47
மையங்களிலும் இந்த தேர்வு நடந்தது. 15ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வில் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக