வெள்ளி, 27 டிசம்பர், 2013

டிட்டோஜாக் கூட்டம் முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டது


சென்னை, திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பேராசிரியர் நரசிங்கம்நிலையத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் தலைமையில் டிட்டோஜாக் கூட்டம் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் பங்கு பெற்றன.  கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தவிர்த்த பிற சங்கங்கள் அனைத்தும் பேரணி நடத்தலாம்என்றும், ஆர்ப்பாட்டம் நடத்தலாம் எனவும் கூறின. ஆனால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மட்டும்ஏற்கனவே ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என அனைத்தும் நடத்தி விட்டோம் எனவும், இனி மாவட்ட அளவில் போராட்ட ஆயத்தக்கூட்டம் நடத்திவிட்டு அடையாள வேலைநிறுத்தம் அல்லது தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளலாம்எனக் கூறியது.  பிற இயக்கங்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கூட்டத்திலிருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணி பாதியிலேயே வெளியேறியது.

 மற்ற 6 சங்கங்கள் கூடி சில முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டது. வருகிற 30.12.2013 அன்று தமிழக அரசுடன்  சந்தித்து கோரிக்கை வைக்கப்பட உள்ளது. அதையடுத்து 10.01.2014ல் மாவட்ட அளவில் டிடோஜாக் கூட்டம் நடத்தவும், 11.01.2014 அன்று டிடோஜாக் சார்பில் செய்தியாளர்களுடன் சந்திப்பு (PRESS MEET)ம், 02.02.2014 அன்று மாவட்ட தோறும் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகதகவல்கள் தெரிவிக்கின்றன. 
எனினும் வெளியேறிய  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணி சங்கத்துடன் மீண்டும் சந்தித்து பேரணியில் பங்கு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக