வியாழன், 30 ஜனவரி, 2014

ஆன்லைனில் பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மதிப்பெண்கள் பதிவுசெய்யப்பட உள்ளன

பிளஸ்-2 தேர்வு எழுதும் அறிவியல், கணித பிரிவு மற்றும் தொழில்கல்வி பாடப்பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு உண்டு. தேர்ச்சி பெறு வதற்கு தியரியில் 150-க்கு குறைந்த பட்சம் 30 மதிப்பெண்ணும், செய்முறைத்தேர்வில் 50-க்கு 40 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும். பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்படும்.
செய்முறைத்தேர்வை பிப்ரவரி 28-க்குள் முடிக்கு மாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கருத்தில்கொண்டு சென்னை மாவட்டத்தில் 3 கட்டங்களாகவும், மற்ற மாவட்டங்க ளில் 2 கட்டங்களாகவும் செய்முறைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதுநாள் வரை செய்முறைத்தேர்வு மதிப்பெண்களை தேர்வுக்கு வருகை தரும் வெளி ஆசிரியர்கள் தான் பதிவுசெய்து தேர்வுத் துறைக்கு அனுப்பி வந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக செய்முறைத் தேர்வு மதிப்பெண் தினசரி தேர்வு முடிய முடிய அன்றைய தினமே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. மதிப்பெண் விவரங்கள் மாணவர்களின் தகவல் தொகுப்பில் உடனடியாக பதிவுசெய்யப்பட்டுவிடும்.
எனவே, முன்பு போல தேர்வு முடிவுகளுக்கான பணிகளின்போது செய்முறைத்தேர்வு மதிப்பெண் விவரங்களை தியரி மதிப்பெண்ணுடன் தனியாக குறிப்பிடத் தேவை யில்லை. தேர்வுமுடிவுகளின் பணிகளை விரைந்து முடிப்பதற்காக ஆன்லைன் பதிவு முறையை தேர்வுத்துறை நடைமுறைப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக