திங்கள், 24 பிப்ரவரி, 2014

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை விரைந்து முடிக்க, நடவடிக்கை

நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்
பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

நடப்பாண்டு,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பல்வேறு மாற்றங்களை, தேர்வுத்
துறை செய்துள்ளது. தற்போது, விடைத்தாள்கள் திருத்தும் பணியையும், விரைந்து முடிக்க,
நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, 32 மாவட்டங்களில், 66 மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன; கடந்தாண்டை விட, 36 மையங்கள் அதிகரித்து உள்ளன. திருத்தும் பணி துவங்கி, 10 நாட்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பாடம் எடுத்த ஆசிரியர்களை மட்டுமே வைத்து, விடைத்தாள்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக