வியாழன், 27 பிப்ரவரி, 2014

2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு, தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்கக்கோரி முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை

2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு, தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்கக்கோரி பலரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் பலர் நீதிமன்றத்தினை நாடிவருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், புலிவளத்தை சேர்ந்தவர் பி.மகேஸ்வரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், புலிவளத்தை சேர்ந்தவர் பி.மகேஸ்வரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

இதன் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் 7–ந்தேதி தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் கலந்து கொண்டு, 85 மதிப்பெண் பெற்றேன்.

ஆனால், தேர்வில் 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுத்தால் மட்டுமே வெற்றி என்று தமிழக அரசு தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்திருந்ததால், நான் தோல்வி அடைந்தேன்.
இதன்பின்னர், 2013–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதிலும், அதே தகுதி மதிப்பெண் முறை கடை பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக கல்வித்துறை செயலாளர் கடந்த பிப்ரவரி 6–ந்தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவை சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் என்ற தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை வழங்கி, அதாவது 55 சதவீதம் (82 மதிப்பெண்) என்று தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த சலுகை 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். ஆனால், 2012–ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் பங்கேற்றவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை.

அரசின் இந்த உத்தரவு, ஆசிரியர் தகுதி தேர்வுகளை எழுதியவர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் 2013–ம் ஆண்டு நடந்த தேர்வில் கலந்துக் கொண்டவர்களுக்கு மட்டும் சலுகை என்ற உத்தரவு நியாயமற்றது ஆகும். இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.

எனவே 2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும், தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழ்நாடு கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்


அரசு பரிவுடன் தங்கள் கோரிக்கையை பரிசீலித்து தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்க உத்தரவிடவேண்டும் என 2012ல் தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்க்கின்றனர்


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக