வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

குரூப்-4 ரிசல்ட் தயார் எந்நேரத்திலும் வெளியிடப்படலாம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு தயாராக உள்ளது. எந்நேரத்திலும் ரிசல்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதினர்.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தேர்வு முடிவு தயாராக உள்ளது. தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப்-4 தேர்வைப் பொருத்தவரை ஒரே ஒரு எழுத்துத் தேர்வுதான். மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக