சனி, 22 பிப்ரவரி, 2014

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி உச்சரிப்பு வழிகாட்டிக் கையேட்டை முதல்வர் வெளியிட்டார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி உச்சரிப்பு வழிகாட்டிக் கையேட்டை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது ஆங்கில திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசுப் பள்ளிகளில் 6,917ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. அந்தப் பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கேட்டல், பேசுதல்,படித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை வளர்க்க வேண்டும் என்பதற்காகஆசிரியர்களுக்காக ஆங்கில மொழி உச்சரிப்பு வழிகாட்டிக்
கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், மாணவர்களும் இதைப் படிக்கும்போதே அதற்குரியஉச்சரிப்பு ஒலியையும், உச்சரிப்பில் அழுத்தம், இடைநிறுத்தம்போன்றவற்றை குறுந்தகட்டின் மூலம் கேட்டு ஆங்கிலமொழி அறிவை வளர்த்துக்கொள்ளும் முறையில்
வழிகாட்டி கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 1,600 பள்ளிகளில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில்இந்தக் கையேடு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த
வழிகாட்டி கையேட்டை முதல்வர் ஜெயலலிதா வெளியிட, பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் கே.சி. வீரமணி பெற்றுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக