சனி, 22 பிப்ரவரி, 2014

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற புது விண்ணப்பம்

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, "பென்ஷன்' மற்றும் இதரபணபலன்களை வழங்கும் நடைமுறையை எளிதாக்குவதற்காக, புது விண்ணப்பத்தை,அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இதற்காக, "படிவம் 5' என்ற புதிய விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில்,
அனைத்து விதமான தகவல்களையும், சம்பந்தப்பட்ட ஊழியரே, சுயமாக சான்றொப்பம் அளிக்க வேண்டும். இதில், அந்த ஊழியர், பெயர், முகவரி, வங்கி கணக்கு விபரம் அளிக்க வேண்டும். மேலும், மொபைல் போன் நம்பர், இ மெயில் முகவரி, ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.இதன் மூலம்தனிப்பட்ட ஊழியருக்கு ஏற்படும் சிரமங்களை சரி செய்வதோடு, அனைத்து நடவடிக்கைகளும்,வெளிப்படையாக இருக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக