புதன், 26 பிப்ரவரி, 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. ஆட்சிமன்ற குழுவில் அரசுப் பிரதிநிதிகள்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றகுழுவுக்கு மூன்று உறுப்பினர்களை அரசு நியமித்துள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவுக்கு அரசுப்பிரதிநிதிகளாக ஓய்வுபெற்ற பொருளாதாரத் துறை பேராசிரியர் பி.பொன்னுசாமி, சென்னையைச் சேர்ந்தஎஸ். தென்னரசு மற்றும் மதுரை பயோனியர் என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனர் தனுஷ்கோடி ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது. இவர்களது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் எனஅரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக