செவ்வாய், 18 மார்ச், 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம்ஆசிரியர்கள்.

இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம்ஆசிரியர்களை ஈடுபடுத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 66 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலையொட்டி, விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்தஆண்டு முடிந்தவரை கூடுதலான ஆசிரியர்களைக் கொண்டு பிளஸ் 2விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககஅதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 21-ஆம் தேதி தொடங்குகின்றன. முதலில் மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கிலப்பாடங்களும், பிறகு, முக்கியப் பாடங்களும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மதிப்பீடு செய்யப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக