புதன், 28 மே, 2014

பொறியியல் படிப்பில் சேர ஜூன் 3-வது வாரத்தில் கவுன்சலிங்

பொறியியல் படிப்பில் சேர 1.70 லட்சம் மாணவ, மாணவிகள் விண் ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ஜூன் மூன்றாவது வாரத்தில் கவுன்சலிங் தொடங்குகிறது.

பொறியியல் படிப்பில் மாண வர் சேர்க்கைக்கான விண்ணப் பங்கள், தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கடந்த 3-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. விண் ணப்பம் பெறவும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்க வும் மே 20-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அது 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டது. அதன்படி செவ்வாய்க்கிழமை கடைசி நாள் ஆகும். அன்று ஏராளமானோர் விண்ணப்பங் களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து விண்ணப்பங்கள் விற் பனையானது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை மாலை வரை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட் டுள்ளன. இன்னும் தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவும் வாய்ப் பிருப்பதாக தமிழ்நாடு பொறியி யல் மாணவர் சேர்க்கை செயலா ளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்திருந் தனர். இந்த ஆண்டு 20 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விண் ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்வது, ரேங்க் பட்டி யல் வெளியிடுவது ஆகிய பணி கள் முடிவடைந்ததும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங், ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக