புதன், 25 ஜூன், 2014

தமிழகம் முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை முதல்வர் வியாழக்கிழமை (ஜூன் 26) திறந்து வைக்கிறார்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை முதல்வர்ஜெயலலிதா வியாழக்கிழமை (ஜூன் 26) திறந்து வைக்கிறார். அதில்,சென்னையில் 20 மருந்தகங்களும் பிற மாவட்டங்களில் 80 மருந்தகங்களும்அடங்கும்.

தமிழகத்தில் மலிவு விலையில் கூட்டுறவு மருந்தகங்கள்செயல்பட்டு வருகின்றன. அந்த மருந்தகங்களில்மருந்துகளை வாங்குவோருக்கு 10 சதவீதம்வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மருந்தகங்களுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பைத் தொடர்ந்து,அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது.மாநிலம் முழுவதும் மேலும் 100 அம்மா மருந்தகங்களைத் திறக்கதிட்டமிடப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழகஅரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கென ரூ.20 கோடி மாநில விலை நிலைப்படுத்தும் நிதியத்தில்இருந்து பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச்செயல்படுத்தும் வகையில் கூட்டுறவுத் துறை நடவடிக்கைகளை எடுத்தது.

அதன்படி, சென்னையில் கூடுதலாக 20 மருந்தகங்களும் பிற மாவட்டங்களில்
80 மருந்தகங்களையும் முதல்வர்ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்து வைக்கவுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆங்கில மருந்துகள் கிடைக்கும்: கூடுதலாக திறக்கப்படும்அம்மா மருந்தகங்களில் ஆங்கில மருந்துகள் கிடைக்கும் எனவும்,ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 10 சதவீத தள்ளுபடி கூடுதலாகத்திறக்கப்படும் மருந்தகங்களிலும் அளிக்கப்படும் என கூட்டுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக