செவ்வாய், 17 ஜூன், 2014

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை (ஜூன் 18) மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள்சேர்க்கை புதன்கிழமை (ஜூன் 18) தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் இரா.தனலட்சுமி திங்கள்கிழமை வெளியிட்டசெய்திக் குறிப்பு:

வருகிற புதன்கிழமை அனைத்து வகுப்புகளுக்கும்சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வும்

19ஆம் தேதி பி.காம், பி.பி.ஏ.மற்றும் பி.காம் கூட்டுறவு வகுப்புகளில் சேர பிளஸ் 2 தேர்வில் பகுதி 3ல்600 முதல் 800 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும்,
20ஆம் தேதி 400 முதல் 599மதிப்பெண்கள் பெற்றவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அதேபோல,
ஜூன் 23ஆம் தேதி அனைத்து பி.எஸ்சி வகுப்புகளில் சேர 600முதல் 800 மதிப்பெண்கள் பெற்றவர்களும், 24ஆம் தேதி 400 முதல் 599 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும், 25ஆம் தேதி பி.ஏ. ஆங்கிலம் வகுப்பில்சேர பிளஸ் 2 வகுப்பில் ஆங்கிலத்தில் 120 முதல் 200 மதிப்பெண்கள்பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

ஜூன் 26ஆம் தேதி பி.ஏ. தமிழ் வகுப்பில் சேர பிளஸ் 2 தேர்வில் தமிழில் 120முதல் 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மற்றும் சிறப்புத் தமிழ் பயின்றஅனைவரும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

27ஆம் தேதி பி.ஏ.வரலாறு பாடத்தில் சேர பிளஸ் 2 தேர்வில் பகுதி 3இல் 400 முதல் 800 மதிப்பெண்கள் பெற்றமாணவர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொள்ளலாம் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக