ஞாயிறு, 29 ஜூன், 2014

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்

ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் பயன் பெற,ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
தமிழக அரசின் நிதி மற்றும் கருவூலத்துறையின் அரசாணை எண் 171, நாள்: 26.6.2014 ன் படி,ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும்ஜூலை 1 முதல் 2018 ஜூன் 30 வரை அமலில் இருக்கும். இதில் பயன்பெற, ஓய்வூதியர்கள்ஜூலை 31 வரை, கருவூலத்தில் படிவம் பூர்த்தி செய்து வழங்கலாம். இதில் பயன்பெற விரும்பினால், '1800 233 5544' எண்ணில் தொடர்பு கொண்டு, விபரங்களை தெரிவிக்க வேண்டும். பின்,பட்டியலில் உள்ள மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறலாம். இம்மாவட்டத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை, அப்போலோ, ஜவஹர், ஆசீர்வாதம் மருத்துவமனைகள் உட்பட 44 மருத்துவமனைகளில்இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரனை 73737 03197 ல்தொடர்பு கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2(ஜாபர் 73730 69010),
தேனி (கபீர் 73730 69012),
ராமநாதபுரம் (ரவிச்சந்திரன் 73737 03174),
சிவகங்கை (விஜயகுமார் 73730 69011),
விருதுநகரில் (சுரேஷ்குமார் 73730 69015) .
தொடர்பு கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக