புதன், 18 ஜூன், 2014

நினைவுக்கு வரவில்லையே.. சே...

ஆசிரியர் மிக அருமையான எடுத்துக்காட்டுகள் சொன்னாரே, மிக எளிதாக நினைவில் வைக்க ஏதோ சொன்னாரே..அந்த மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் வெற்றி படிக்கட்டுகளில் ஏற ஏதோ சிறப்பு பயிற்சியளித்தாரே…

அந்த பத்திரிகைகளில் ஒருஅற்புதமான அறிவிய்ல கருத்து எழுதப்பட்டிருந்ததே… என்ன அது? என்ன அது?.. நினைவுக்கு வரவில்லையே.. சே.. குறிப்புகள் எடுக்காமல் போனோமே….

இப்படி கேட்டத,படித்ததை நினைவிற்கு கொண்டுவர முடியாமல் தவிர்ப்போர் ஏராளம்.

குறிப்புகள் எடுத்தல்

வகுப்பறை / கருத்தரங்கம் / கூட்டம் இவைகளில் கலந்துகொடு அங்குதரப்படுகின்ற உரைகளை காதுகால் மட்டும் கேட்டுக் கொண்டிருப்பதை விட, சிறு ஏட்டில் குறிப்புகள் எடுக்க்க கற்றுக்கொள்ள வேண்டும். பள்ளியில் படிக்கும்போதே இந்தப் பயிற்சியைப் பெறுவது நல்லது.

பள்ளிப் புத்தகங்களில் காணப்படாத சில முக்கியச் செய்திகளை விரிவுரை செய்தவர் தரக்கூடும். ஒரு மணி நேரம் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒருவர் பேசுகிறார் என்றால் அதைத் தயாரிக்க அவருக்கு பல மணிநேரம் தேவைப்படிருக்கும். அது மட்டுமல்ல, பல ஆண்டுகள் அவர் பெற்ற அனுபவம், அவர் படித்த பல நூல்களில் சேகரித்த செய்திகள் அப்போது வெளிப்படும். அவற்றைக் காதுகளால்மட்டும் கேட்டால் சில நாட்களில்பல மறந்துவிடும். எங்கோ பார்த்த ஞாபகமாய அவர் உருவம் அமைய, யாரவர் என்று குழப்பத்துடன் நிற்க, "போன மாசம் ஈரோடு கொங்கு கலையரங்கத்திலே உங்க சம்பந்தியின் சகோதரி மகள் மலர்க்கொடியின் திருமணத்திலே பார்த்தம். உங்க சம்பந்திதானே உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். அரை மணி நேரம் பேசினோம். மறந்திட்டீங்களா? நான் தான் நடராஜன். LIC யிலே "Development Officer" என்று விலா வாரியாக விவரிக்க, சட்டென ஞாபகத்திற்கு வருகிறது.

"ஓ… வெரி சாரி. ஞாபகத்திற்கு வந்திருச்சு. சே, மறதி அதிகமாயிடுச்சு. நீங்கதானே பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் வந்து Drop பண்ணனீங்க . அது கூட மறந்துபோச்சே. மன்னிடுச்சுடுங்க"

"பரவாயில்லை, பரவாயில்லை"

இதுபோன்ற அனுபவம் அனைவருக்கும் ஏற்படுவது இயற்கைதான்.

கீழ்கண்ட வார்த்தைகளை ஒருநிமிடம் பாருங்கள்.

குதிரை, ரோஜா, மலை, மயில், ஆறு, மின் விசிறி, இரயில், கொடி, ஆப்பிள், பாரிதாய்.

ஒரு தாளை எடுத்து அப்படியே எழுத முடிகிறத்தா பாருங்கள். முயற்சி செய்யுங்கள். ஒரு சிலரால் மட்டுமே பார்ப்ப பத்தையும் அப்படியே வரிசை மாறாமல் எழுத முடியும். சிலர்வரிசை மாறி எழுதுவார்கள். மேலிருந்து கீழாக அதாவது குதிரையிலிருந்து, பாரிதியார் வரைமாறாமல் சொல்பவர்களை, கீழிருந்து மேலாக, அதாவது பாரிதியாரில்ஆரம்பித்து குதிரை வரை சொல்லச் சொன்னால் இடம் மாறாமல் அப்படி சொல்வார்களா?

பயிற்சி பெறாமல், ஏதேனும் ஒருமுறையை பயன்படுத்தாமல் அப்படிச் சொல்வது மிகவும் கடினமானது. ஆனால் பயிற்சி பெற்ற பின்னர்சொல்வது மிகுவும் எளிதானது. முயன்று பாருங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

முதுகுத்தண்டு, கழுத்து, தலை இவைகளை ஒரே நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமரவும். ஆழ்ந்த சுவாசத்தை மூக்கின் வழியாக மெதுவாக உள்ளே இழுத்து, மெதுவாக வெளியேற்றவும். மூன்று முறை செய்து கொள்ளவும். உங்களுடைய மூளையினுடைய அதிர்வெண்கள் படிப்படியாக குறைந்து கொண்டே வரும். @ நிலையை எளிதில் அடைந்துவிடுவீர்கள்.

கண்களைத் திறந்து முதல் வார்த்தை 'குதிரை' யை எழுத்தால் பார்க்கிறீர்கள். கண்களை மூடவும். உங்கள் மனத்திரையில் அதன் வடிவத்தைக் காண்கிறீர்கள். "டக், டக், டக்" என்று பாய்ந்தோடும் குதிரையை நன்கு பார்க்கிறீர்கள். லேசாகக் கண்களைத் திறந்து இதேபோல் கீழிருந்து மேலாக மனத்திரையில் ஒன்றுக்கு மேலே ஒன்றாக பாருங்கள்.

"பாரிதியாருக்கு மேலே ஆப்பிள். ஆப்பிளுக்கு மேலே கொடி. கொடிக்கு மேலே இரயில், இரயிலுக்கு மேலே மின் விசிறி, மின் விசிறிக்கு மேலே ஆறு. ஆறுக்கு மேலே மயில், மயிலுக்கு மேலே மலை. மலை. மலைக்கு மேலே ரோஜா. ரோஜாவுக்கு மேலே குதிரை.

இப்போது கண்களை திறந்து பார்க்காமேலேயே அனைத்தையும் இடம் மாறாமல், மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக அப்படியே உங்களால் சொல்ல முடியும்.

எப்படி இது சாத்தியமாயிற்று?

@ நிலையில் காட்சிகளாக நீங்கள் கண்டவை அப்படியே அச்சாக மனதில்/ மூளையில் பதிகிறது. எளிதாகத் திரும்பச் சொல்ல முடிகிறது.

கற்பனை கதையும், மனத்திரைப்படமும்;

'கற்பனை' அறிவைக் காட்டிலும் சிறந்தது என்பதை தெரிந்து கொள்ள, மேற்சொன்ன வார்த்தைகளை வைத்து ஒரு கற்பனைக் கதையை 'நீங்களே உருவாக்கி திரைப்படமாய் மனத்திரையில் காணுங்கள்'.

அழகான குதிரை ஒன்று பாய்ந்து ஓடுகிறது. ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும் மலர்த்தோட்டத்தின் வழியாகச் செல்கிறது. வழியே ஒரு மலை குறுக்கிடுகிறது. மலைக்கு கீழே ஆறு ஆடுகிறது. மலை மீது அழகிய மயில் தோகை விரித்து நடனமாடிக் கொண்டிருகிறது. வானிலிருந்து தொங்கும் மின்விசிறி அதற்கு இதமான காற்றை வீசுகிறது. வான் வெளியிலே இரயில் பறந்து செல்கிறது. அந்த இரயிலில் பட்டொளி வீசி நமது தேசியக்கொடி பெரிதாகப் பறக்கிறது. அசைந்தாடும் அக்கொடியிலிருந்து ஆப்பிள் பழங்கள் கொட்டுகின்றன. அவைகளை வான் வெளியில் தனது இரு கைகளாலும் பிடிக்கிறார் பாரதியார்.

இப்போது மிக எளிதாக அந்த வார்த்தைகளை வரிசையாகச் சொல்லி விடலாம். மனப்பாடம் செய்தால் வரிசையாய்ச் சொல்லி விடலாம் மனப்பாடம் செய்தால் வரிசையாய் வராது. மனத்திரையில் பார்த்தால் உடனே வரும்.

இதைப் போலவே நினைவு வரை படத்தை கற்பனைத்திரையில் காணுங்கள். மீண்டும் மீண்டும் காணுங்கள். நிரந்தர நினைவாற்றலாக மாற்றுங்கள். தேர்வுகளை எளிதாக வெல்லுங்கள்.


புதிர்

1 கிராம் எடை கொண்ட தங்கக் காசுகளை உருவாக்கித் தரும் பத்து இயந்திரங்கள் உள்ளன. ஒரே ஒரு இயந்திரம் மட்டும் 1.1 கிராம் காசை உருவாக்குகிறது. ஒவ்வொரு இயந்திரத்தின் முன்னர் அது உருவாக்கிய தங்க காசுகள் கொண்ட பெட்டிகள் உள்ளன. ஒரே ஒரு முறைதான் எடை போட்டுப் பார்க்க அனுமதி. எந்த இயந்திரம் அதிக எடை கொண்ட காசை உருவாக்குகிறது என்று கண்டுபிடிப்பீர்கள்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக