வெள்ளி, 18 ஜூலை, 2014

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி :புதிதாக 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள்

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி :புதிதாக 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள்

அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழிப் பாடப் பிரிவுகளில்இந்த ஆண்டு புதிதாக 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகபள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இந்தியகம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் (தளி), அரசுப் பள்ளிகளில்ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்கி அரசே ஆங்கில வழிக்கல்வியை ஊக்கப்படுத்தக் கூடாது என்றார்.
அப்போது குறுக்கிட்டு அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது: தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வியை எதிர்த்துப் போராடுபவர்களும்அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கவைப்பதில்லை. ஏழை, எளியவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின்
குழந்தைகளும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதற்காகவே அரசுப் பள்ளிகளில்
ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகளில் இந்த ஆண்டு 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் புதிதாகசேர்ந்துள்ளனர். பல பெற்றோர்கள் தங்களது பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகளைத்தொடங்குமாறு. கோரி வருகின்றனர் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக