வெள்ளி, 18 ஜூலை, 2014

100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு விளையாட்டுச் சாதனங்கள்

இந்த கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.20 லட்சத்தில்
விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப்பதிலளிக்கும்போது அமைச்சர் வீரமணி வெளியிட்ட அறிவிப்பு: மாணவர்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகபள்ளிகளில் சதுரங்கப் போட்டிகளை முதல்வர்ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார். விளையாட்டு தொடர்பானநடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.10கோடி நிதியை ஒதுக்கீடு செய்தார். அதன் தொடர்ச்சியாக 100பள்ளிகளுக்கு விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படுகின்றன.
32 மாவட்டங்களில் அறிவியல் கண்காட்சி: தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும்
அறிவியல் கண்காட்சி ரூ.32 லட்சம் செலவில் நடத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக