வெள்ளி, 18 ஜூலை, 2014

பி . எட் . படிப்பில் சேர 19– ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பி . எட் . படிப்பில் சேர 19– ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி .விஸ்வநாதன் தெரிவித்தார்
. பி . எட் . படிப்பில் சேர 19– ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி . விஸ்வநாதன் தெரிவித்தார் . நிருபர்களிடம் கூறியதாவது :–

பி . எட் . படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பி . எட் . கல்லூரிகள் 21 உள்ளன . 649 சுயநிதி பி . எட் . கல்லூரிகள் இருக்கின்றன . இவற்றில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 2 ஆயிரத்து 400 பி . எட் . இடங்கள் உள்ளன . அந்த இடங்களுக்கு மட்டும் ஒற்றைச் சாளற முறையில் கலந்தாய்வு நடத்தி மாணவ – மாணவிகளை சேர்க்க உள்ளோம் . இந்த கலந்தாய்வு முதல் முதலாக பல்கலைக்கழகம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது . பி . எட் . படிக்க விரும்பும் மாணவ – மாணவிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் .
19– ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 29 மையங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன . சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 3 மையங்கள் ஏற்படுத்தி அவற்றில் சென்னை , திருவள்ளூர் , காஞ்சீபுரம்ஆகிய மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . அதுபோல தர்மபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தர்மபுரியில் உள்ள மையத்தில் விண்ணப்பிக்கலாம் . மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையத்தை நாடலாம் . இது பற்றிய முழுவிவரமும் இணையதளத்தில் (www.onlinetn.com) தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த இணையதளம் 19– ந்தேதி தான் செயல்படத் தொடங்கும் . அன்று விவரங்களை அறிந்து கொள்ளலாம் . 28– ந்தேதி கடைசி நாள் விண்ணப்பிக்க மாணவ – மாணவிகள் அந்த மையங்களுக்கு செல்லும்போது , புகைப்படம் வைத்திருந்தால் கொண்டு செல்லுங்கள் . இல்லையென்றால் உங்களை அதிகாரிகளே புகைப்படம் எடுப்பார்கள் . விண்ணப்பிக்க அத்தனை உதவிகளையும் செய்வார்கள் . தப்பாக விண்ணப்பிக்க முடியாத அளவுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம் . எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த 29 பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது . விண்ணப்பித்தவர்களுக்கு ரசீது கொடுக்கப்படும் .
விண்ணப்பிக்க 28– ந்தேதி கடைசி நாள் . பல்கலைக்கழக இணைய தள முகவரி www.tnteu.in கலந்தாய்வு 28– ந்தேதிக்கு பிறகு 3 அல்லது 4 நாட்கள் கழித்து ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் . பாடம் வாரியாக வெளியிடப்பட உள்ளது . பின்னர் ரேங்க் மற்றும் கலந்தாய்வு தேதி அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் எஸ் . எம் . எஸ் . மூலம் அனுப்பப்படும் . செல்போன் மற்றும் பி . எஸ் . என் . எல் . தரைவழி ( லேண்ட் லைன் ) தொலைபேசி மூலமும் பேசி தெரிவிக்கப்படும் . எம் . எட் . படிப்பில் சேர விண்ணப்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் .
இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் ஜி . விஸ்வநாதன் தெரிவித்தார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக