வெள்ளி, 18 ஜூலை, 2014

பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் முதல் 500 இடங்களைப் பெறும்
மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவர்கள் பட்டய, பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வீதம்பரிசுத் தொகை வழங்கப்படும். இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நடப்புக் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவர்களில்1,173 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் 1,176மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவிகளுக்கும் முதல்வரின் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்று, ஜாதிச் சான்று,இப்போது படிக்கும் கல்லூரியில் இருந்து பெறப்பட்ட படிப்பதற்கானசான்றுகளின் நகல்களுடன் அவர்கள் பிளஸ் 2 பயின்ற மாவட்டத்திலுள்ள மாவட்டஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர் நல அலுவலரை உடனடியாகத் தொடர்பு கொள்ளவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக