திங்கள், 28 ஜூலை, 2014

BRTE வழக்கு : பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தடை ஏதும் வழங்கப்படவில்லை!

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன்.பொதுச்செயலாளர்ராஜ்குமார்)அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர்பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன்அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது என .மாநிலத் வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் வாசுதேவன் தெரிவித்ததாக செய்திவெளியானது.

ஆசிரியர் நியமனத்துக்கு அத்தகைய தடை ஏதும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழங்கப்படவில்லை என்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் இறுதித் தீர்ப்புக்குட்பட்டது என்று மட்டுமே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக