ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

PG மதுரை : 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை

ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வின் முதல் நாளில், மதுரை மாவட்டத்தில்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இருவருக்கு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
. மதுரையில்இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், முதன்மைக் கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி தலைமையில் இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது.
முதல் நாளில், மதுரை மாவட்டத்துக்குள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலி இடத்தைப் பூர்த்தி செய்வதற்கான கலந்தாய்வு நடைபெற்றது.முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஏறத்தாழ 130 பேர் தேர்வாகியிருக்கும்நிலையில், மதுரை மாவட்டத்தில் 2 காலியிடங்கள் மட்டுமே இருந்தன.அப்பணியிடத்துக்குத் தகுதியானவர்களுக்கு பணி நியமன
உத்தரவு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக