ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பிளஸ் 2 பாட புத்தகங்கள் அச்சிடும் பணி ஆரம்பம்

'அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடும் பணியை துவக்கி உள்ளோம்.
அரசியல் அறிவியல் புத்தகத்தில், சில குறைகளை சரி செய்ய வேண்டி யிருப்பதாக,
கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, அந்த புத்தகம் தவிர, இதர புத்தகங்களை அச்சிடும்
பணியை, விரைவில் ஆரம்பிப்போம்' என, பாடநூல் கழக வட்டாரம் தெரிவித்தது.

உத்தரவு : இது குறித்து, துறை வட்டாரம் கூறியத ாவது: வழக்கமாக, பாட புத்தகங்களை, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்புவோம். தற்போது, நேரடியாக, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு,
புத்தகங்களை அனுப்ப, அச்சக நிறுவனங்களுக்குஉத்தரவிட்டுள்ளோம். இதன்மூலம், புத்தகங்கள், விரைவாக சென்றடைவதுடன், அச்சக நிறுவனங்களுக்கு,போக்குவரத்து செலவும் குறையும்.

ஜனவரி மாதம், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவகல்வி திட்டத்தின் கீழ், மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்க வேண்டும். அதற்காக, பாட புத்தகங்கள்அச்சிடப்பட்டு வருகின்றன. முன்கூட்டியே பணிகளை துவக்கியதால், பணி, முடியும் நிலையில் உள்ளது. டிசம்பரில், புத்தகங்களை அனுப்புவோம். அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடும்பணியையும் துவக்கி உள்ளோம். அரசியல் அறிவியல் புத்தகத்தில், சில குறைகளை சரி செய்ய
வேண்டியிருப்பதாக, கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, அந்த புத்தகம் தவிர, இதர புத்தகங்களை அச்சிடும் பணியை, விரைவில் ஆரம்பிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக