வெள்ளி, 24 அக்டோபர், 2014

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலந்தாய்வில் +2 படிக்காமல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம்

25-10-2014 அன்று நடைபெறவுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கலந்தாய்வில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள்மேல்நிலைக் கல்விக்கு இணையாக கருதி அவர்களும் உ.தொ.க.அ. கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் எனபள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரின் அரசாணை எண் 165 நாள் 15-10-2014 ஐ மேற்கோள்காட்டி அனைத்து மாவட்டதொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணை வழங்கியுள்ளார்.
முன்னுரிமையில் விடுபட்ட தகுதியுடையவர்கள் கலந்தாய்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம் என தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். பேனலில் விடுபட்டவர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற்று கலந்தாய்வில்கலந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக