திங்கள், 27 அக்டோபர், 2014

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக பதவி உயர்வு

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக பதவி உயர்வு
அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக,பதவி உயர்வு செய்யப்பட்டனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு, சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில், நடந்தது. காலியாக உள்ள, 67இடங்களை நிரப்ப, பணிமூப்புஅடிப்படையில், 160 தலைமை ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில், 67 பேர், பதவி உயர்வு இடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, 67 பேருக்கும், பதவி உயர்வுக்கான உத்தரவுகளை,தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழங்கினார். பதவி உயர்வினால் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடம், விரைவில் நிரப்பப்படும் என,இயக்குனர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக