திங்கள், 20 அக்டோபர், 2014

மாநிலத்தில்உள்ள பல மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாநிலத்தில்உள்ள பல மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வடகிழக்கு பருவமழையால்தமிழகம் முழுவதும்கனமழை பெய்துவருவதால், மாநிலத்தில்
உள்ள பல மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,நாகை,திருச்சி, ஈரோடு, திருப்பூர்,
கோவை,கடலூர், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர்,திருவாரூர். அரியலூர், கரூர் விழுப்புரம் ஆகிய பலமாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.

சாதகமான வானிலை ஏற்பட்டுள்ளதால், தமிழகம், கேரளா, ஆந்திரா பகுதிகளில், 48 மணி நேரத்தில்,வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.இதற்கிடையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழல்கள், தமிழகம், கேரளா, ஆந்திரா,கர்நாடகா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவக்கத்திற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு, சில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என,
வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், நேற்று காலை முதலே, சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் விட்டுவிட்டு,கனமழை பெய்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக