புதன், 15 அக்டோபர், 2014

மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்

மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத்தெரிகின்றது.
முதுகலை ஆசிரியர்கள் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கு 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர்த்து ஏற்கனவே உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் எனவும் அதற்கான பணி பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எந்தெந்த பள்ளிக்ளுக்கு கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன எனும் விவரம் விரைவில் வெளியிடப்படும் எனத்தெரிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக