சனி, 1 நவம்பர், 2014

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு நாளை ( நவம்பர் 2-ஆம் தேதி )கலந்தாய்வு

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுஇணையதளம் வாயிலாக நவம்பர் 2-ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுஅனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும்இணையதளம் மூலம் நவம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இதில் 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப்பட்டியலில் வரிசை எண் 494 முதல் 600 வரையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.
ஏற்கெனவே (2014-ஆம்ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி) நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்டு ஆணை பெற வேண்டியவர்கள், அந்தந்த மாவட்டகலந்தாய்வு மையத்துக்குச் சென்று அங்குள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பதவி உயர்வு ஆணையைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக