சனி, 24 ஜனவரி, 2015

TRB PG TAMIL KEY ANSWER :அண்மைவிளி : இராமன்-இராம! -ஈறுகுன்றல் ( இறுதி எழுத்துக் குறைந்தது)


எட்டன் உருபே எய்து பெயர் ஈற்றின்
திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்
திரிபுமாம் : பொருள் படர்க்கை யோரைத்
தன்முகமாகத் தான்அழைப் பதுவே

(நன்னூல் : 303)


பெயர்ச்சொற்கள் விளிக்கப்படும்பொழுது பெயரின் இறுதியில் சில மாறுதல்கள் ஏற்படும். அவை, ஈறு திரிதலும் (இறுதிஎழுத்து மாறுதல்), ஈறு குன்றலும் (குறைதல்), ஈறு மிகுதலும், இயல்பாக வருதலும், ஈற்றுஅயல் எழுத்துத் திரிதலும் ஆகும். (ஈற்றயல் எழுத்து = இறுதி எழுத்துக்கு முந்தைய எழுத்து.)

எடுத்துக்காட்டு

தந்தை- தந்தாய் !

ஈறுதிரிதல் ('ஐ'
என்னும் இறுதி
எழுத்து ஆய் எனத்திரிந்தது)

தங்கை- தங்காய் !
அன்னை- அன்னாய்!

மன்னன் வருக!- மன்! வருக

ஈறுகுன்றல் ('ன்' என்ற இறுதி 
எழுத்துக் குறைந்தது)

நண்பன்- நண்!
புலவன்- புல!

அரசன்- அரசனே

ஈறுமிகுதல் (ஏகாரம் மிகுந்து வந்தது)

இறைவன்- இறைவனே
மகன்- மகனே

தம்பி- தம்பி!

இயல்பாக வந்தது.
(மாற்றம் இன்றி வருவது)

தோழி- தோழி!
மாமி- மாமி!

மக்கள்- மக்காள்

ஈற்றுஅயல் (இறுதி
எழுத்துக்கு முந்தைய
எழுத்து) நீண்டது

வணிகர்- வணிகீர்
புலவர்- புலவீர்


  • அண்மைவிளியும்  சேய்மைவிளியும்
  • இவ்விளிவேற்றுமை அண்மைவிளி, சேய்மைவிளி என இரு வகைப்படும்.

    அருகில் உள்ளவரை அழைப்பது அண்மை விளி; தொலைவில் உள்ளவரை அழைப்பது சேய்மை விளி.

    (அண்மை = அருகு, சேய்மை = தொலைவு)

    எடுத்துக்காட்டு

    இராமன்- இராம!

    அண்மைவிளி

    அம்மா- அம்ம!
    இராமன்இராமா, இராமனே,
    இராமாவோ
    சேய்மைவிளி

    .அண்மைவிளி : இராமன்-இராம!  -ஈறுகுன்றல் ( இறுதி எழுத்துக் குறைந்தது)

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக