புதன், 4 பிப்ரவரி, 2015

நாளை தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு வியாழக்கிழமை (பிப்.5) முதல் தொடங்க உள்ளது. பிப்ரவரி இறுதிவரை நடைபெறும் இந்தத் தேர்வில் மாநிலம் முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் மார்ச் 5 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 2,300
தேர்வு மையங்களில் சுமார் 8.82 லட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் செய்முறைத்
தேர்வுகளில் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட
பாடங்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். இந்தப் பாடங்களில் 200-க்கு 150 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், 50மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வும் நடத்தப்படும். தொழில் பிரிவு மாணவர்களுக்கு 2 பாடங்களில் 400 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான
ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வு மதிப்பெண்களை பிப்.,28க்குள் சென்னை இயக்குனரகத்திற்கு அனுப்ப மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக