புதன், 25 பிப்ரவரி, 2015

PG TRB TAMIL :இறுதி விடைக்குறிப்பில் நீக்கப்பட்டஇரண்டு கேள்விகள் - மதிப்பெண் வழங்கவேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு

தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு ஜன.10 ஆம்தேதி நடைபெற்றது. இத் தேர்வை 1.90 பேர் எழுதினர். இத் தேர்வின் முடிவுகள் பிப்.6 ஆம் தேதி வெளியிடப்பட்டது.தேர்ச்சி அடைந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மண்டலம் வாரியாக பிப்.16, 17 ஆம் தேதிகளில் நடந்து முடிந்துள்ளது.

முதுகலை ஆசிரியர் தமிழ்தேர்வு மதிப்பீட்டில் சிறிய எழுத்துப்பிழையின் காரணமாக இரண்டு கேள்விகள் நீக்கப்பட்டு 148 வினாக்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்யப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டது.அதன்படி சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையில் எழுத்துப்பிழையின் காரணமாக இரண்டு கேள்விகள் நீக்கப்பட்டது தவறு அதற்கு மதிப்பெண் வழங்கவேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதனை விசாரித்த நீதியரசர் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக