சனி, 7 பிப்ரவரி, 2015

TRB PG TAMIL FINAL KEY :வருத்தமாவது இடுக்கண்.அஃதாவது எளிதின் முடியாமல் அரிதின் முயலும் முயற்சியான் வரும் துன்பம்.!

274 மெய்ப்பாட்டியல்
சூ. 255 :
மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு

யாப்புற வந்த இளிவரல் நான்கே

(6)

க - து :


மூப்பு முதலிய நான்கு பொருளும் பற்றி இளிவரல்
பிறக்குமென்கின்றது.

பொருள் :திட்பமுறவந்த இளிவரல் என்னும் மெய்ப்பாட்டிற்குக்
காரணமாகிய பொருள் மூப்பும் பிணியும் வருத்தமும் மென்மையுமாகிய
நான்குமாம் எனக் கூறுவர் புலவர்.


இவையும் இருபாலும் பற்றி வரும்.


1. மூப்பாவது :முதுமை. அஃதாவது புலன்கள் பொறிவழி நிகழாது
இளைத்தலும் எழிலும் இளமையும் கழிதலுமாம்.


எ - டு :
வாழும் நாளொடு யாண்டுபல உண்மையின்

தீர்தல் செல்லாதென் உயிரெனப் பலபுலந்து

கோல்கா லாகக் குறும்பல ஒதுங்கி

நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்டுயின்று

முன்றிற் போகா முதிர்வினள் யாயும்

(புறம்-159)

இது தனக்குற்ற மூப்புப்பற்றி வந்த இளிவரல்.


மூத்துத்தலை யிறைஞ்சிய நின்னொடு யானே

போர்த்தொழில் தொடங்க நாணுவல்

(பேரா-மேற்)

இது பிறர் மூப்புப்பற்றி வந்த இளிவரல்.


2. பிணியாவது நீங்காப் பசியும் நேராத காமமும் உறங்கா நிலையும்
ஊறுசெய் நோயும் இவை போல்வன பிறவுமாம்.


எ - டு :
ஊரலர் தூற்றுமிவ் வுய்யா விழுமத்துப்

பீரலர் போலப் பெரிய பசந்தன

நீரலர் நீலம்என அவர்க்கஞ் ஞான்று

பேரஞர் செய்த என்கண்

(கலி-142)

இது தன்கண் உற்ற நோய்பற்றி வந்த இளிவரல்.


சேயள் அரியோட் படர்தி

நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே

(குறு-124)

எனத்தன் நெஞ்சினை வேறுநிறுத்தித் தலைவன் கூறலின் இது பிறர்
கட்டோன்றிய பிணிபற்றி வந்த இளிவரலாம்.

--------------------------------------------------------------------------
3. வருத்தமாவது இடுக்கண்.அஃதாவது எளிதின் முடியாமல் அரிதின்
முயலும் முயற்சியான் வரும் துன்பம்.
---------------------------------------------------------------------------
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்

தாமிரந் துண்ணும் அளவை

ஈன்ம ரோஇவ் வுலகத் தானே

(புறம்-74)

என்பது தனக்குற்ற வருத்தம் பற்றி வந்த இளிவரலாம்.


ஒன்றுஇரப்பான் போல்எளி வந்தும் சொல்லும்-உலகம்

புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன்

அன்னான் ஒருவன்றன் ஆண்டகை விட்டென்னைச்

சொல்லஞ் சொற்கேட்டி ...?

(கலி-47)

என்பது பிறர்க்குற்ற வருத்தங் காரணமாகப் பிறந்த இளிவரல்.



http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=11&pno=310

Reference
தொல்காப்பியம்

பொருளதிகாரம்

ஆராய்ச்சிக் காண்டிகையுரை
பாவலரேறு ச.பாலசுந்தரம்

உவமவியல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக