திங்கள், 30 மார்ச், 2015

முடிகிறது பிளஸ் 2 தேர்வு

முடிகிறது பிளஸ் 2 தேர்வு
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கியது. மொழிப்பாடங்கள் மற்றும் பெரும்பாலான முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் முடிந்து விட்டன. உயிரியல், தாவரவியல், கணிதப் பதிவியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கானதேர்வுகளுடன், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிகிறது. கணினி அறிவியல் மாணவர்களுக்கு, கடந்த வெள்ளிக்கிழமையே தேர்வுகள் முடிந்து விட்டன.
இந்நிலையில், விடைத்தாள் திருத்தப் பணிகள், தமிழகம் முழுவதும், 73 மையங்களில் நடக்கின்றன. மொழிப்பாடங்களுக்கு பல மையங்களில், திருத்தம் முடிந்து விட்டது. இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:முக்கியப் பாடங்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி விட்டது. அதே நேரம், கணிதம், வேளாண் அறிவியல், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு மட்டும், வினாத்தாளில் பிழைகள், கேள்விகளில் குழப்பம், வினாவிலுள்ள அளவீட்டில் குளறுபடி போன்ற காரணங்களால், 'கீ ஆன்சர்'மற்றும் மதிப்பெண் வழங்கும் விதிகளில் மாற்றம் தேவைப்படுகிறது.வினாத்தாள் தயாரிப்பு கமிட்டி ஆசிரியர்களுடன், கல்வித் துறை அதிகாரிகள் பேசி, 'கீ ஆன்சரில்' திருத்தம் செய்யப்படும்; பிறகே, பிரச்னைக்குரிய பாடங்களுக்கு விடை திருத்தம் துவங்கும். மேலும், கணிதத் தேர்வு நடந்த போது, ஓசூரில் 'வாட்ஸ் அப்'பில் வினாத்தாள் லீக் ஆனதால், அந்த மாவட்ட விடைத்தாள் கட்டுகளை திருத்துவதா அல்லது ஆய்வுக்கு உட்படுத்துவதா என்றும், முடிவு செய்யவேண்டியுள்ளது. எனவே, இப்பாடங்களுக்கான திருத்தம் தாமதமாக வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக