செவ்வாய், 17 மார்ச், 2015

CRC: சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை வெளியாகிறது

CRC: சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை வெளியாகிறது அரசாணை எண் :62. நாள்: 13.03.2015 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சிக்கான ஈடுசெய்விடுப்பிற்கான அரசாணை விவரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக SSTA சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:
SSTA வின் 6 மாத கோரிக்கைகளில் ஒன்று, வெற்றிகரமாக நிறைவேறுகின்றது. ஆகஸ்ட் 2014 ல் இருந்து கடந்த 6மாதங்களாக SSTA மாநில தலைவர்கள் தொடக்கக் கல்வி இயக்குநரை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களைப்போல தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கும் குறுவள மைய அளவிலான ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கைவைத்து பள்ளி கல்வி அரசாணையை திரட்டி இயக்குனரிடம் அளித்து தொடக்க கல்வித்துறைக்கும் வழங்கதொடர்கோரிக்கை வைக்கப்பட்டது .SSTA மாநில பொறுப்பாளர்கள இது தொடர்பாக தொடக்க கல்வி இயக்குநரை சந்தித்த விவரங்கள் நமது வலைத்தளத்திலும் மேலும் அனைத்து கல்விசார் இணையதளங்களிலும் வெளியிடப்பட்ட செய்திகள் நாம் அறிந்ததே. அதன் தொடரச்சியாகதற்போதைய அரசாணை வெளியிடப்படுகிறது.நம் கோரிக்கை வெற்றி பெற பிற தோழமைஇயக்கங்களும் வலியுறுத்தின ஆசிரியர்கள் உரிமைக்கு ஒத்துழைப்பும் நல்கிய அனைத்து ஆசிரிய சங்கங்களுக்கும் நமது SSTA சார்பாக நன்றி
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக