செவ்வாய், 17 மார்ச், 2015

PG TRB news update :சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் இன்று (17.03.2015) மீண்டும் விசாரணைக்கு வந்தன

சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதியியல் மற்றும் ,தமிழ் பாடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்.6 ஆம் தேதி வெளியிட்ட இறுதி விடைக்குறிப்பில் சில தவறான விடைக்குறிப்பு உள்ளதாகவும்,அதனை பரிசீலித்து சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கக்கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.வழக்கினை விசாரித்த நிதியரசர் துரைசாமி பதில்மனு தாக்கல் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார். வேதியியல் மற்றும் ,தமிழ் பாட வழக்குகள் வழக்கறிஞர் போராட்டம் காரணமாக நேற்று விசாரணை நடைபெறவில்லை .இன்று (17.03.2015) மீண்டும் விசாரணைக்கு வந்தன. அரசின் சார்பில் பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்குகள் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்க தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக