புதன், 18 மார்ச், 2015

TRB:உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 25ம் தேதி, நேர்முகத் தேர்வு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு வரும் 25ம்
தேதி, நேர்முகத் தேர்வு நடத்தப்படும்' என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில்,வணிகவியல் - கணினி பிரிவு, வணிகவியல் - சர்வதேச வணிகம் மற்றும் கணினி தொழில்நுட்பம்ஆகியவற்றுக்கு, உதவி பேராசிரியர் பணிக்கு நேரடி நியமன பணி, 2013ல் துவங்கியது. ஒருபணியிடத்துக்கு ஐந்து பேர் என்ற விகிதத்தில் தேர்வானவர்கள் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டு உள்ளது; 43 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர்; கணினி தொழில்நுட்பத்துக்கு யாரும் தகுதி பெறவில்லை.விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை டி.ஆர்.பி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக