சனி, 23 மே, 2015

TRB PG TAMIL :சிற்றிலக்கியங்கள்

  

 பிற்காலச் சிற்றிலக்கியங்கள்
 

சிற்றிலக்கியம் வடமொழியில் பிரபந்தம் என அழைக்கப்படுகிறது.  தமிழில் யாப்பு,  செய்யுள் எனும் சொற்களைப் போன்றே பிரபந்தம் என்ற சொல்லுக்கும் நன்கு கட்டப்பட்டது என்று பொருள். சிற்றிலக்கிய நூல்கள் நெடிய பாடல்கள் போன்றவை.  ஒருசில துறைகளைப் பற்றிய செய்தியை உள்ளடக்கமாகக் கொண்டவை.   சுருங்கிய அளவில் எளிதில் படித்து முடிக்கக்கூடியனவாக அமைபவை.   சங்க இலக்கியத்திலேயே சிற்றிலக்கிய வகைகள் பல கிளைவிட்டன.  குறிப்பாக,  பத்துப்பாட்டு நூல்கள் இறைவனை, அரசனை, வள்ளலைப் புகழ்ந்து பாடிய அடிப்படையிலேயே பிற்காலச் சிற்றிலக்கியங்கள் தோற்றம் கொண்டன. நீதி இலக்கியம், பக்தி இலக்கியம் சார்ந்த சிற்றிலக்கியங்களும் செழித்தன. பின்னர், சிறப்புப் பெற்ற பிள்ளைத்தமிழ், தூது, உலா போன்ற சிற்றிலக்கியங்கள் தழைத்தோங்கின.
 

அறம்,  பொருள்,  இன்பம்,  வீடுபேறு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ குறைந்து வரப் படைப்பவை சிற்றிலக்கிய வகைகள். இவற்றைப் பாட்டியல் நூல்கள் பல்வேறாக வரையறுக்கின்றபோதிலும் பொதுவாகச் சிற்றிலக்கிய வகைகள் 96   எனும் வழக்குக் காணப்படுகின்றது. இத்தொண்ணூற்றாறு வகைகளுள் பரணி, தூது, உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, பள்ளு போன்றவை முக்கியமானவையாகக் கருதப்பெறுகின்றன.
 

சிற்றிலக்கிய வகைகளுள் பெரும்பான்மை கடவுள் (அ)  மன்னன் (அ)  தலைவனைப் புகழ்வதாக அமைகின்றன. குறவஞ்சி மற்றும் பள்ளு இலக்கியங்கள் முறையே குறிஞ்சி நில,  மருதநில மக்களின் வாழ்வியலை விளக்குகின்றன. 
 

சிற்றிலக்கிய
வகைகள்

சிறந்த
நூல்கள்

ஆசிரியர்
பெயர்

காலம்
(கி.பி.)

பா

அமைப்பும் சிறப்பும் - பிற நூல்கள்

பரணி

 

1. கலிங்கத்துப் பரணி
(முதல் பரணி)

செயங் கொண்டார்

11 ஆம் நூற்.

கலித்தாழிசை

1000 யானைகளைக் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம். 13 உறுப்புகளால் ஆனது. தோற்ற நாடு, தோற்ற தலைவன், தோற்ற பொருள் ஆகியவற்றைத் தலைப்பாகக் கொண்டு அமைவது.

பிற நூல்கள் :

1. அஞ்ஞவதைப் பரணி (தத்துவராயர்)

2. பாசவதைப் பரணி (வைத்தியநாத தேசிகர்)

2.தக்கயாகப் பரணி

ஒட்டக் கூத்தர்

12 -ஆம் நூற்.

கலித்தாழிசை

தூது

 

1.நெஞ்சுவிடு தூது (முதல்தூது)

உமாபதி சிவம்

14-ஆம் நூற்.

கலிவெண்பா

 

அக மற்றும் புறச் செயல்களுக்காக மனிதரையோ, அஃறிணைப் பொருள்களையோ தூது அனுப்புவதாகப் படைக்கப்படும் இலக்கிய வகை. இஃது அகத்தூது, புறத்தூது என இருவகைப்படும்.

பிற நூல்கள் :

1. அழகர் கிள்ளைவிடு தூது (சொக்கநாதப் புலவர்)

2. விறலிவிடு தூது (கூளப்ப நாயக்கன்)

2. தமிழ்விடு தூது

ஆசிரியர் பெயர் தெரியவில்லை

காலம் அறிய முடிய வில்லை

உலா

மூவருலா

ஒட்டக் கூத்தர்

12 -ஆம் நூற்.

கலிவெண்பா

தலைவன் உலா வரும்பொழுது எழு பருவ மகளிர் (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்) அவன்மீது காதல் கொள்வதாக அமைவது.

பிற நூல்கள் :

1. திருக்கயிலாய ஞான உலா (முதல் உலா) (சேரமான் பெருமாள் நாயனார்)

2. ஏகாம்பரநாதருலா (இரட்டைப் புலவர்கள்)

கலம்பகம்

 

1. கச்சிக் கலம்பகம்

இரட்டைப் புலவர்கள்

14-ஆம் நூற்.

பல்வகைப் பாவும், பா இனமும் விரவி வரும்

 

பல்வகை மலர்களால் ஆன மாலை போன்று பல்வகையான 18 உறுப்புகளைக் கொண்டு பாடப்படும் இலக்கிய வகை. 

பிற நூல்கள் : 

1. நந்திக் கலம்பகம் (கி.பி. 9 - ஆம் நூற்றாண்டில் தோன்றியது) 

2. தில்லைக் கலம்பகம் (இரட்டைப் புலவர்கள்)

2. மதுரைக் கலம்பகம்

குமரகுருபரர்

17-ஆம் நூற்.

பிள்ளைத் தமிழ்

மீனாட்சி - யம்மை பிள்ளைத் தமிழ்

குமரகுருபரர்

17-ஆம் நூற்.

விருத்தப்பா

கடவுளையோ,  அரசனையோ, தலைவனையோ குழந்தை யாகப் பாவித்துப் பாடப்படும் இலக்கிய வகை. 3 முதல் 21 மாதங்கள் வரையிலான குழந்தைப் பருவச் செயல்பாடுகள் பாடப்படும். ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.

பிற நூல்கள் :

1. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் (முதல் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர்)

2. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (பகழிக் கூத்தர்)

குறவஞ்சி

குற்றாலக் குறவஞ்சி (முதல் குறவஞ்சி)

திரிகூட இராசப்பக் கவிராயர்

18 - ஆம் நூற்.

விருத்தம், அகவல், வெண்பா, கலித்துறை, கொச்சகம், இசைப் பாக்கள்

தலைவன் மீது காதல் கொண்ட குறிஞ்சி நிலத் தலைவி அடைந்த துயரைப் போக்கும் விதமாக முக்காலம் உணர்ந்த குறத்தி குறி கூறும் முறையில் படைக்கப்படும் இலக்கிய வகை.

பிற நூல்கள் :

1. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (சிவக்கொழுந்து தேசிகர்)

2. பெத்லகேம் குறவஞ்சி (வேதநாயக சாஸ்திரியார்)

பள்ளு

முக்கூடற் பள்ளு (முதல்பள்ளு)

ஆசிரியர் பெயர் தெரியவில்லை

17 (அ) 18 - ஆம் நூற்.

சிந்து, விருத்தம் கலந்தும் வரும்

மருத நிலத்தில் உழவுத் தொழில் செய்யும் பள்ளர் நில மக்களின் வாழ்வியலைப் பேசும் இலக்கியம். இது 'உழத்தி பாட்டு' என்னும் பெயராலும் வழங்கப்பெறும். இதில் நெல் விதையின் வகைகள், மாட்டின் வகைகள், பயிர்த்தொழில் கருவிகள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

பிற நூல்கள் :

1. திருமலைப் பள்ளு

2. திருவாரூர்ப் பள்ளு

பிற சிற்றிலக்கிய வகைகள் (முதன்மையானவை)

அந்தாதி

அற்புதத் திருவந்தாதி (முதல் அந்தாதி)

காரைக்கால் அம்மையார்

கி.பி. 6 (அ) 7 - ஆம் நூற்.

வெண்பா / கட்டளைக் கலித்துறை

ஒவ்வொரு பாடல் அடியின் கடைசிச் சீரின் முடிவில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ அடுத்த அடியின் தொடக்கமாக வருமாறு பாடப்படும் இலக்கிய வகை.

பிற நூல்கள் :

1. சடகோபர் அந்தாதி (கம்பர்) 

2. பொன் வண்ணத்து அந்தாதி (சேரமான் பெருமாள் நாயனார்)

கோவை

பாண்டிக் கோவை (முதல் கோவை)

ஆசிரியர் பெயர் தெரிய வில்லை

6 (அ) 7 - ஆம் நூற்.

கட்டளைக் கலித்துறை

தலைவன், தலைவி முதன்முதலில் சந்தித்தல் முதல் அவர்களின் வாழ்வில் நிகழும் பல்வேறு காதல் நிகழ்வுகளைக் கோவைபடச் (தொகுத்து) சொல்வதால் கோவை எனப் பெயர் பெற்றது. 400 பாடல்களில் அமையும்.

பிற நூல்கள் :

1. திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)

2. தஞ்சைவாணன் கோவை (பொய்யாமொழிப் புலவர்)

மாலை

திரு விரட்டை மணிமாலை (முதல் மாலை)

காரைக்கால் அம்மையார்

6 (அ) 7 -ஆம் நூற்.

ஏதேனும் ஒரு பா / பாவினம்

ஒரு பொருள் குறித்துப் பல்வேறு கூறுகளைத் தொகுத்து ஒரே பாவால் பாடப்பெறும் இலக்கிய வகை.

பிற நூல்கள் :

1. மீனாட்சியம்மை திருவிரட்டை மாலை (குமரகுருபரர்)

2. நான்மணி மாலை (சிவப்பிரகாசர்)


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக