வெள்ளி, 10 ஜூலை, 2015

குரூப்-4 தேர்வின்சான்று சரிபார்த்தல் :ஜூலை 13-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறவுள்ளது

குருப்-4 தேர்வில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு 1,683 காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2014-ம் வருடம் டிசம்பர் மாதம் 21-ந்தேதிதேர்வு நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்த்தல், ஜூலை 13-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சென்னை பிரேசர் பாலச் சாலையில்அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 2,176
பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவுதபால் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அட்டவணை தேர்வாணைய இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது.இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜயகுமார்ஆகியோர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக