செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

TRB PG TAMIL: முத்தொள்ளாயிரத்தில் கற்பனைகள்


முத்தொள்ளாயிரத்தில் கற்பனைகள்

 

ந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லைஆராய்ச்சி அறிஞர் தி.வை.சதாசிவம் பண்டாரத்தார் இந்நூலில் உள்ள சில அகச்சான்றுகள்எடுத்துக்காட்டி இந்நூலாசிரியரை கி.பிஐந்தாம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்கிறார்காதலையும் வீரத்தையும் தங்கள் வாழ்வியல்நெறியாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள்இந்நூலின் பெயர் இரு வகைகளில் விளக்கப்படுகிறது.

 

மூன்று வேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களகைகொண்டது.

 

ஒவ்வொருவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் பாடல்களில் புகழும் நூல் இது.

மூவேந்தர்களின் வீரம்கொடைபுகழ்படைச்சிறப்பு (யானை மறம்குதிரை மறம்பகையரசர்களிடம் திறை பெற்றமைநாடுநகர் வளம்,பகைப்புலம் பழித்தல்களம்வெற்றிஎயில்கோடல்கைக்கிளை போன்ற பொருண்மைகளில் கற்பனைச் சுவையுடன் முத்தொள்ளாயிரம்பாடல்கள் அமைந்துள்ளனமூவேந்தர்களைப் புகழ்வதற்குக் கைக்கிளை என்னும் அகத்திணைப் பிரிவை இவ்வாசிரியர் பயன்படுத்தியுள்ளார்.இடைக்காலத்தில் எழுந்த ஆழ்வார்களும்நாயன்மார்களும் நாயகன் நயகி பாவத்துடன் ஜீவாத்மா-பரமாத்மாவுடன் கூடுவதற்குத் துடிக்கும்துடிப்பைத் தங்கள் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்முத்தொள்ளாயிர ஆசிரியர் தன்னை ஒருதலைக்காதல் கொண்ட பெண்iணாகவும்சேரன்,சோழன்பாண்டியன் என்னும் மூவேந்தர்களின்பால் தமக்குள்ள அன்பினை மையப்படுத்தி பல பாடல்கள் பாடியுள்ளார்.

 

வித்துவான் .சேதுரகுநாதன் அவர்கள் உரை எழுதியுள்ள முத்தொள்ளாயிரத்தில்

 

கடவுள் வாழ்த்து.            1

பாண்டியன்.                  60

சோழன்                       46

                                 

   சேரன்                      23

                                  130
---

என அமைந்துள்ளனபிற உரையாசிரியர்களின் உரைகளில் பாடல்களின் எண்ணிக்கையும் (108, 109, 110) வைப்பு முறையும் (சேரன்சோழன்,பாண்டியன்மாறுபடுகின்றனமூவேந்தர்களும் தொன்மை மரபிற்கு ஏற்பவும்சிறப்பிற்கேற்பவும் சிறப்புப் பெயர்கொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

 

சேர மன்னர்கள் : கோதைமாந்தைக்கோவஞ்சிக்கோபூமியர் கோவானவன்முசிறியர் கோமான் எனவும்

 

சோழ மன்னர்கள் : விந்தையர்கோன்கோழிக்கோமான்வளவன்செம்பின்கிள்ளிநீர்நாடன்புகாஅர்ப்பெருமான் சென்னிகாவிரி நாடன் எனக்குடிப் பெயர்களாலும் 

பாண்டிய மன்னர்கள் : மாக்கடுங்கோன்மாறன்கூடற்கோமகன்தென்னன்செழியன்வழுதிதமிழ்நர் பெருமான்பொதியற்கோன்செலேகவண்ணன்வையையார் கோமான்கொற்கைக் கோமான்பஞ்சவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்
 

கற்பனை வளம் : கவிதைக்கு உயிர் மூச்சாக விளங்குவது கற்பனையேசேரநாட்டின் வளத்தினையும் மக்களின் அச்சமற்ற வாழ்வினையும் ஆசிரியர்சுவைபடவிளக்கியுள்ளார்
 

நாட்டு வளம் : விரும்பத்தக்க வேற்படையைக் கொண்ட சேரனது நாட்டில் சேறுபட்ட (அள்ளல்நீர் நிறைந்த வயல்களில் அரக்காம்பல்கள் பூத்துக்கிடந்தனஅவைகளைப் பார்த்துப் பறவைகள் தங்கள் சிறகால் பக்கத்தில் நீந்தி வந்த குஞ்சுகளை அனைத்து ஒடுக்கிக் கெண்டனவாம்குஞ்களின்சிறகுகளில் எங்கே தீப் பற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்தால்தான்... 

 

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய்அவிழ

வெள்ளம்தீப் பட்டது எனவெரீஇப் - புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்குமுகவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கைக்கோதை நாடு (முத். 110) 
 

நெருப்புக் கொளுந்துகளாய்ச் செந்தாமரப் பூக்கள் வயல்நீர் மீது வாயவிழ்ந்து பூத்ததும் தண்ணீர்தான் தீப்பற்றிக் கொண்டதோ என்று பறவைக்கூட்டம் பதபதைத்து அச்சத்தால் ஆரவாரம் செய்தன.

 

நாட்டில் பயப்பட வேண்டிய காரியம் ஒன்றும் இல்லைதான்ஆனாலும் பயப்பட்டுத் தவிக்கின்றன இந்த பறவைகள்சேரமன்னது ஆட்சி முற்றிலும்அமைதியைக் கெடுத்துவிடும் என்று எப்படிச் சொல்லக்கூடும்இந்தவிதமாக எக்களிப்போடும் நகைச் சுவையோடும் நாயகி தோழியிடம்கூறுகிறாள்பெருமிதமும் நகையும் தோழியின் கூற்றில் அமைந்துள்ளதுவெள்ளத்தில் ஆரக்காம்பலாகிய தீப்படித்திருக்கின்றது எனக்கூறிநாட்டுவளம் கூறப்பட்டுள்ளது
 

பாண்டிய நாட்டின் வளம்பாண்டிய நாடு முத்துக்களுக்குப் பெருமை பெற்ற நாடுபாண்டிய நாட்டில் ஒரு பெண் தன் தோழியிடம் தன் நாட்டின்வளமை பற்றிக் கூறுவதாக இக்காட்சி அமைந்துள்ளதுபக்கத்தில் உள்ள கடற்கரைச் சோலைக்குச் சென்றபோது அங்கு எங்கு பார்த்தாலும்முத்துக்களாகவே தோன்றுகின்றனகமுக பாளையிலிருந்து உதிர்ந்த மணிகளும்புன்னையின் அரும்புகளும்சங்கு ஈன்று போட்ட முதிராமுத்துக்களின் தொகுதியும் இவ்வாறு காட்சியளிக்கின்றன.
 

முத்துக் குடையினால் உலகுக்கு நிழல் செய்கின்ற வழுதிநாட்டில் எங்கும் முத்துக்களே மிளிர்கின்றனஅவன் வெண்கொற்றற் குடையைப்போலல்லவா நாடும் விளங்குகின்றதுநந்து (சங்குமுதிர்ந்த முத்துக்களை ஈன்றால் மக்கள் அணிவதற்கு எடுத்துச் செல்வர்முதிரா முத்துக்கள்எடுப்பாரின்றி சிதறிக் கிடக்கும்.
 

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்தர் இளங்கமுகின் பாளையும் - சிந்தித்

திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்

நகைமுத்த வெண்குடையான் நாடு. (முத்.36)

 

முத்துப்போன்ற வடிவுடைய பொருட்களை எல்லாம் முத்துக்களாகக் கற்பனை செய்திருப்பதைக் காணமுடிகிறது.
 

பாண்டிய நாட்டில் மக்கள் துணையுடன் கூடிக்களித்து மகிழும் மற்றொரு காட்சியும் இவண் ஒப்பு நோக்கத் தக்கது.

 

மைந்தோடு மகளிர் திமிர்ந்திட்ட

குங்கும ஈர் சாந்தின் சேறிழுக்கி – எங்கும்

தடுமாறல் ஆசிய தன்மைத்தே தென்னன்

நெடுமாடக் கூடல் அகம். (முத். 37)
 

கூடல் மகளிர் மேல்மாடத்திலிருந்து கொழுநரோடு ஊடிச் சிதறவீசிய குங்குமச் சந்தனச் சேறு வீதிமுழுவதும் பரவிக்கிடத்தலால் அவ்வீதிகள்வழிச்செல்வோரை வழுக்கிவிட்டுத் தடுமாறச்செய்யும் இயல்புடையதுஇப்பாடலில் நெடுமாடக் கூடல் நகரின் செல்வச் செழிப்பும் இன்பப்பெருக்கமும்சுட்டப்பட்டுள்ளது.
 

சோழமன்ணின் உறையூர் நகர்வளம் மாற்றாரைப் போரில் வெல்லும் வளவனது அழகு நிறைந்த உறையூரினிடத்திலுள்ள வீதிகள்பூ விற்பவர்கள்முதல்நாள் மாலைப் பொழுதிற் கிள்ளிக் களைத்தெறிந்த பல வண்ணபூக்கள் மிகுதியாகப் பரவியிருக்கின்ற விதத்தைத் தெருக்கள் வில்லோடுபொருந்திய விண்ணகம் (வானவில்போன்று கண்ணுக்கு இனியனவாயக் காட்சியளிக்கிறதுகிள்ளிக் களைந்த பூவின் மிகுதி இவ்வளவென்றால்தொடுத்த பூக்களுக்கு அளவு எவ்வளவாகும்அவற்றை சூடியிருப்பவர் (அணிந்திருப்பவர்அதிகமாக இருப்பர்.

 

அம்மலர்ப் பொழில்கள்தாம் எவ்வளவோ என்று ஆராயும் போது உறந்தையின் சிறப்புபொழிலின் மிகுதிஇன்பப்பெருக்கம் அறியமுடிகிறது.தரையில் கிள்ளிக் களைந்த சிதறிக் கிடக்கும் பூக்களை வானவில்லுடன் கற்பனை செய்து பார்ப்பது சுவைபயக்கிறது
 

சேரன் ஆட்சிச்சிறப்பு 
 

மூவேந்தர்களும் அன்று ஆண்ட நாட்டின் எல்லைப்பரப்பும் கற்பனையின் விரிவாக்கமாகத்தான் அமைந்துள்ளது.

 

வானிற்கு வையகம் போன்றது வானத்து

மீனிற் கனையார் மறமன்னர் – வானத்து

மீன்சேர் மகியனையான் விண்ணுயர் கொல்லியர்

கோன்சேரன் கோதையென்பான். (முத். 16) 
 

கோதை அரசாளும் காலத்தில் அவன் ஆளும் நிலப்பரப்பின் அகலம்அவனுக்கு அடங்கி சிற்றசர்தொகைஅவனுடைய இயல்பு ஆகியவற்றிற்குமிகைப்படுத்தப்பட்ட கற்பனையாக புலவர் அளவீடு தந்துள்ளார்
 

கோதையின் ஆட்சியின் நிலப்பரப்பு – வானப் பரப்பின் அளவுள்ளதுஅவனாட்சியில் அடங்கியுள்ள சிற்றரசர்களின் எண்ணிக்கை – வானவெளியில்மின்னுகின்ற விண்மீன்கள் அளவாகும் - கோதையோ வெண்மதியை ஒத்தவன் என்கிறார்
 

சோழனின் ஆட்சிப் பரப்பு 
 

குடைசெங்கோல் என்பன அரசர்க்குச் சிறந்தவைசெங்கோல் பிடித்தல் முறை கோடாமைக்கு அறிகுறியாகும்சோழமன்னன் உலகிற்கு நிழல்செய்கின்ற குடை மிகமிகப் பெரியதுமந்தர மலைதான் அதற்குக் காம்புநீல ஆகாயப் பரப்பு முழுவதும் அதற்கு மேற்பரப்பு ஒலைசந்திரன்நடுவட்டம்அந்தக் குடை உலகம் முழுவதும் நிழல் செய்து காக்கின்றது என்று அவன் குடையின் தண்மையையும்கோலின் செம்மையையும் புலவர்கூறியுள்ளார்.

 

பாண்டினின் ஆட்சிப் பரப்பினைச் சுட்டும் விதமாக கீழ்க்காணும் பாடல் அமைந்துள்ளது 
 

நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்

காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்

ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி

பூமி மிதியாப் பொருள். (முத். 97) 
 

தேர்ச் சக்கரத்தை நிமிர்த்தவல்ல தோள்களில் ஒளி செய்யும் மாலையணிந்தவன் பாண்டியன் அழகிய வெண்கொற்றக் கொடையினை உடையஅம்மன்னனது ஆணையினால்பொன்னால் ஆகிய அழகிய அணிகலன்களை அணிந்த கண்ணிமைக்காத தேவர்களின் திருந்திய அடிகள்இம்மண்ணுலகை மிதிக்க மாட்டாபாண்டியனது உடமை எனக் கருதி தேவர்கள் பூமியை மிதிக்கமாட்டாத செய்திக்குப் பாண்டியனின்திறத்தினைக் கற்பனையாக ஆசிரியர் படைத்துக் காட்டியுள்ளார்
 

யானை மறம் 
 

முத்தொள்ளாயிரத்தில் மொத்தம் 33 பாடல்களில் யானைகள் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன
 

பெருமை 
 

மூவேந்தர்களில்படைச்சிறப்புநாடுகளின் பெருமையானைகளின் வீரம்ஆற்றல்போரிடும் தன்மைநாணம்இரக்க உணர்வு முதலியனவற்றைச்கற்பனை கலந்து சுட்டும் விதமாக இப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன
 

நீர்வளம் மிக்க வஞ்சி மாநகரில் கள் குடிப்பவர்கள் கள் குடிக்கும் பாத்திரத்தில் அதை வாங்கிகள்ளின் மேற்பரப்பில் மிதக்கும் நுரையைக் கையால்வழித்து வெளியே எறிந்துவிட்டுக் கள்ளைக் குடிப்பார்கள்அவ்வாறு நுரையை வழித்து எறியும் போது கள்ளும் நிலத்தில் சிந்தும் அந்த வீதியில்அரசனின் அழகிய யானைகள் செல்லும்போது வீதியில் கிடக்கும் கள்ளிலும்நுரையிலும் யானையின் கால்கள் படும்அப்போது கள்ளும்நுரையும்மண்ணுடன் கலந்து வீதியெங்கும் சேறாகிவிடும்.

 

களிகள் களிகட்கு நீட்டத்தம் கையால்

களிகள் விதிர்த்திட்ட வெங்கள் - துளிகலந்து

ஓங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே

பூம்பொழில் வஞ்சி அகம். (முத்14) 
 

ஒரு அரசனின் போர் திறத்தைப் பற்றிப் பேசவேண்டும் என்றால் அவன் மிகவும் பலமுள்ளவன் என்று சொல்லும்போது படைபலம் பற்றியும்பேசப்படுகிறது 'பல்யானை மன்னீர்என்று அழைத்துப் படுதிறை தந்துய்ம்மின் என்று அறிவுறுத்துகிறார்ஒரு அரசனின் புகழைப்பாடவும்பலயானைகள் கொண்ட பேரரசர்கள் தேவைப்படுகிறார்கள்.

 

'செங்கண்மாக் கோதைஎன சிவந்த கண்களையுடைய சேரமன்னனைப் பற்றிக் குறிப்பிடும்போது சிவந்த கண்களை உடையவன் - போர்நாட்டம்மிகுந்தவன் அவனைப் போலவே அவனுடைய யானையும் 'சினவெங் களியானைஎன அழைக்கப்படுகிறது.
 

பாண்டியனின் யானைகள்
 

'மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்

உருத்தரு மார்போலை யாகத் - திருத்தக்க

வையக மெல்லா மெமதென் றெழுதுமே

மெய்யிலை வேல் மாறன் களிறு' (முத்47)
 

வீரம் கனல்கின்ற வேற்படைமன்னர் திரள்திரளாகக் கூடியிருக்கின்றனர்பகை வீரர்களின் அகன்ற பரந்த பெரியமார்பைப் பார்த்தது பாண்டியனின்யானை பாய்ந்ததுமார்பைத் துளைத்துவிட்டதுதன் தந்தத்தை மருப்பூசியாகக் கொண்டு பகை வீரனின் மார்பை ஓலையாக எண்ணி 'இந்நாடுஎமதென்று எழுதும்என்பதாக யானையின் வீரச் செயலை பாண்டியனின் படைவீரன் ஒருவன் கூறுகிறான்சீவக சிந்தாமணியில் கட்டியங்காரன்கந்துக்கடனிடம் யானையின் வீரச்செயல்பாட்டை கூறியிருப்பது ஒப்பு நோக்கத்தக்கது.
 

யானையின் இரு தந்தங்கள்
 

பேய்க்கு அச்சத்தை உண்டாக்கும் வேப்பந்தாரினை அணிந்த பாண்டியனது உயர்வும் அழகும் பொருந்திய யானையின் இரண்டு கொம்புகளும்பகைவரிடம் அச்சத்தைத் தோற்றுவித்தனபகைவரின் மதிலை ஒரு கோட்டால் இடித்துத் திறந்து உள்ளே சென்றதுபகையரசனது மார்பாகியவயலில் மற்றொரு கோடாகிய கலப்பையால் உழுததுஉழுதவுடனே வெற்றி விளைந்துவிட்டதுஒருகோடு கதவுகோலின் வேலையையும்,மற்றொன்று கலப்பையின் வேலையையும் செய்ததாக வீரர்கள் பேசிக் கொள்கின்றனர்.

 

உருவத்தார்த் தென்னவன் ஓங்குஎழில் வேழத்து

இருகோடும் செய்தொழில் தேரில் ஒரு கோடு

வேற்றார் அகலம் உழுமே ஒருகோடு

மாற்றார் மதில்திறக்கு மால் (முத்15)
 

மற்றொரு பாடலில் யானையின் தோற்றமும்செயலும் கற்பனையின் எல்லைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

 

தோற்ற மலைகட லோசை புயல்கடாம்

காற்றி னிமிர்ந்த செலவிற்றாய்க் கூற்றுங் (முத்16)

 

யானையின் தோற்றம் மலையைப் போன்றதுஅதன் ஓசை கடல் முழக்கத்தைப் போன்றதுமேகம் மழைபொழிதல் போல் மதநீர் பொழிந்துகொண்டே செல்லும்கடுங்காற்றினும் விரைந்து நிமிர்ந்து செல்லும்பகைவரைக் கொல்லுதலில் எமனுங்கூட அதனிடம் கடன்வாங்கவேண்டியதுதான்என யானையின் செயல்பாட்டில் புலவரின் கற்பனை வளத்தைக் காணமுடிகிறது.

 

யானையின் நாணம்

 

'அடுமதில் பாய வழிந்தன கோட்டைப்

பிடிமுன்பு அழகழிதல் நாணி - முடியுடை

மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்மேல்

றென்னவர் கோமான் களிறு (முத். 17)

 

போர் தொடங்கிற்றுதென்னவனுடைய சினக்களிறு நிமிர்ந்து சென்று பகைவர் மதிலை இடித்ததுமதிலின் கண் இருந்த பொறிகள்அனைத்தையும் உடைத்ததுமதிலும் உடைந்ததுகொம்புகளும் உடைந்தனபகைமன்னரை கீழே தள்ளிக் குத்திக் கிழிக்கின்றது.

மதிலை ஒடித்ததினால் ஒடிந்த கொம்பைப் பிடியானைப் பார்த்து இழிவாக நினைக்கும் என்று எண்ணி நாணிப் பகையரசனுடைய குடiலைக்கிழித்து அதனால் கொம்பை மறைக்கின்றதுசிலம்பு அடைக்கலக்காதையிலும் பகைமன்னனின் குடலைக் குத்தியிழுக்கின்ற யானையைக்காணலாம்.

 

(சிலப் - அடைக்கலக்காதை20-உகசு})

 

மலையையொத்த தோள்களையுடைய கிள்ளியின் யானைக் கொடி கட்டிய மதிலில் பாய்ந்து ஒடிந்த தன் கொம்புகளும்மாற்று வேந்தர் தம்மணிமுடியைக் காலால் எற்றித் தேய்ந்த தன் நகங்களும் பெண் யானையின் முன் அழகிழந்து தோன்றும் பொல்லாமைக்கு நாணி பிடியானைநிற்கும் அந்தப்புரத்திற்குச் செல்லாமல் புறங் கடையிலேயே நின்று விட்டதாம் இந்த ஆண் யானையானைக்கும் நாணமா?

 

சோழநாட்டு யானையின் செயல் கற்பனை வானத்தைத் தொடவைக்கின்றதுகோயர்கோக்கிள்ளி - உறையூர்ச் சோழனது யானைபோர்தொடங்கிவிட்டால் வடக்கே உச்சயினி வரைபோய் வென்றுபின்பு தெற்கே வந்து ஈழ நாட்டையும் வென்றுஉறையூருக்கே வந்து சேர்தல்கிள்ளியின் வழக்கம் அவனுடைய யானையும் அவ்வளவு தொலைவு சென்று வரும்போரில் அது தாவிப்பாய்ந்த ஓட்டத்தைப் பார்த்த வீரர்கள் ஒருகாலால் காஞ்சியிலும்இரண்டாவது காலால் உச்சியினியிலும்மூன்றாவது காலால் தெற்கே திரும்பி இலங்கையிலும் மிதித்து நாலவது காலால்உறையூருக்கு வந்துவிடும் என்று நாலுகாலுக்கும் உள்ள பெருமையைக் கூறுகின்றார்கள்.

 

கிள்ளியின் யானைப் படைகள் நிற்கும் இடத்தை படைவீரர்கள் காண்கின்றனர்அவ்வீரர்கள் வியப்பது போல புலவர் நம்மை வியக்கவைக்கின்றனார்.

யானைக் கூட்டங்கள் மலை மலையாக நிற்கின்றனஆயிரக் கணக்கான யானைகள் மறிகடல் போல முழங்குகின்றனஅவற்றின் கால்கள் பெரியசங்கிலிகளால் கட்டிப் போடப் பட்டுள்ளன.

 

ஒரு வீரன்: யானை தன் காலை நிமிர்ந்தால் சங்கிலிக் கண் அற்றுப்போய்விடும்போல் உள்ளது.

 

மற்ற வீரன்: காலை நிமிர்ந்தால் சங்கிலியை அறுத்துக் கொண்டு போய் பகைவரையெல்லாம் அழித்துவிடும் பகைவருடைய மனைவியர்;தம்கழுத்திலுள்ள மங்கலக் கயிறுகளும் அற்றுப் போய்விடும் என யானையின் மறத்தன்மை இப்பாடலில் சுட்டப்பட்டுள்ளது. (முத். 70)
 

மற்றொரு பாடலிலோ : யானைகள் மதிலுக்கு புறத்தில் உள்ள வேல் வடிவுள்ள இரும்புக் கதவுகளை முதலிற் பாய்ந்து ஒடித்தனபின்பு உட்சென்றுமதிற்கதவைக் கோத்து எடுத்த கோட்டுடன் விளங்குவதால் 'பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றும்என்றார் புலவர்யானை சேனைக் கடலின்நடுவில் பாய்கட்டிய மரக்கலம்போல விளங்குவதாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளதுசெல்கின்ற வழியில் நன்றாக ஊனுண்ணலாம் என்றுதான் பேய்க்கூட்டங்களும் வந்துவிட்டனகளத்தில் இறந்தவர்களுடைய குடல்களை இழுத்து மாலையாக அணிந்து கொண்டு ஊன்தின்ற மகிழ்ச்சியினால்பேய்மகளிர் ஆடுகின்றனர்இத்தகைய ஆரவாரத்துடன் மலை நடந்து வந்ததுபோல் வருகின்றது யானை.

 

சினவெங்களி யானையின் கொலைத்தொழில் போருக்கு யானை செல்கின்றதுநெடுநாளாக எதிர்பார்த்திருந்த கழுகுக் கூட்டம்பருந்துக்கூட்டம்நரிக் கூட்டம் எல்லாம் பின் தொடர்கின்றனபோர் நடந்த நாள் முழுநிலவு நாள்வானில் உள்ள முழுநிலவின் தோற்றம் பகைமன்னர்களின் விரிக்கப்பட்ட வெண்கொற்றக் குடையைப் போல் அமைந்ததனால் அதனை யானை பற்றத் தன்துதிக்கையை நீட்டியதுசேரமன்னின்சினமுள்ள கொடிய மதயானை முழுநிலவினை பகையரசனின் வெண்கொற்றக்கொடை என்றெண்ணி தன் துதிக்கையைக் கொண்டு இழுக்கநிற்பது அருமையான கற்பனை.

 

குதிரை மறம்

மாறனுடைய குதிரைப்படையே அவன் பகைவனுடைய யானைப்படையைத் தாக்கி அழிக்கின்றன என்ற கூற்றின் வாயிலாகச் சேரனிடம் வலியகுதிரைப்படைகள் இருந்ததை அறியமுடிகிறது.

 

'நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப்

புரைசை அறநிமிர்ந்து பொங்கா அரசர்தம்

முன்முன்னா வீழ்ந்தமுடி கள்ளைதத்த மாப்

பொன்னுரைகல் போன்ற குளம்பு' (முத்.13)

 

அணிகளாக அமைந்த ஒளிபொருந்திய வேல்படையைக் கொண்ட பாண்டிய மன்னனைப் போரிட எதிர்த்து நின்ற மாறனுடைய குதிரைப் படையேஅவன் பகைவருடைய யானைப் படையைத் தாக்கி அழிக்கின்றன என்ற கூற்றின் வாயிலாகச் சேரனிடம் வலிய குதிரைப் படைகள் இருந்ததைஅறிய முடிகின்றது
 

பகைவர்களை கழுத்தணி கயிறு அறுபடும்படிச் சினந்து பாண்டிய அரசனுக்கு முன்னர்போரிடுவதற்கு முன்னர் எண்ணிப் பார்க்காமல் தோல்வியுற்றுவீழ்ந்த பகை மன்னர்களின் முடிகளை உதைத்துத் தேய்ந்த பாண்டிய மன்னனுடைய குதிரைகளின் குளம்புகள் பொன்னை உரைத்துப்பார்க்கப்பயன்படுத்தப்பெறும் பெரிய கட்டளைக்கல் போன்ற வடிவில் அமைந்திருந்தனபகைவரின் ஆண்மையின் தரத்தை இது அறிய உதவியது.

 

நெற்கதிர் அறுது;ததபின்பு அந்த வைக்கோலால் மடைகளை அடைக்கும்படி நகர்வளமிக்க சோழநாட்டுவேந்தன் மழைபோல் கொடைத்தொழில்செய்பவன் போர்க்களத்தில் வளவனுடைய குதிரைகள் காற்றினும் கடுகிச் சென்று பகை மன்னருடைய பொன்முடிகளை உதைத்தனமார்பிலுள்ளபொன்னணிகளை எற்றி உதைத்துத் தங்கம் உரைத்த கட்டளைக் கற்போன்ற குளம்புகள் உடையனவாயினவளவனின் நாட்டின் நீர்வளமும்,போர்ப் பரிகளின் வீரமும் சுட்டப்பட்டுள்ளனகற்போன்ற கால்குளம்புகள் என இப்பாடலில் இடம்பெற்றுள்ள தகவல்போல் மற்றொரு பாடலில்பகையரசனின் கீரிடத்தையும்மார்பில் அணிந்துள்ள பொன்னணிகளை எத்தியதால் யானையின் கால் நகங்கள் சிதைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

 

மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப்

பொன்னுரைகள் போன்ற குளம்பு (முத்.68) 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக