புதன், 21 அக்டோபர், 2015

TNPSC குரூப் 2A தேர்வு தேதி மாற்றம் :24.01.2016 அன்று தேர்வு நடைபெறும்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A ல் (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகள்) உள்ளடங்கிய பல்வேறு பதவிகளுக்கான (1863) அறிவிக்கையினை 12.10.2015 அன்று வெளியிட்டிருந்தது. மேற்படி ஒருங்கிணைந்த சார்நிலைப் பணியில், வனத்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை மற்றும் நிலஅளவை
துறைகளில் உள்ள உதவியாளர் பதவி, தலைமைச்செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளநேர்முக உதவியாளர் ஆகியவற்றில் 84 கூடுதல் பதவிகள் உள்ளடக்கியதுணை அறிவிக்கையினை இன்று (20.10.2015)வெளியிட்டுள்ளது. அவ்வறிவிக்கையில் வெளியிடப்பட்ட தேர்வு தேதியும் மாற்றப்பட்டு 24.01.2016 அன்று இத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகின்றது. மேலும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற விவரங்களில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. .மேற்படி தேர்வுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்வலைதளமான. www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமேவிண்ணப்பிக்கலாம்.

12.10.2015 அறிவிக்கையின்படி ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் மறுபடியும் விண்ணப்பிக்கத்தேவையில்லை. தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியன தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.inல்வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த சந்தேகங்கள் இருப்பின் contacttnpsc@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக