வியாழன், 26 நவம்பர், 2015

தமிழை முதல்பாடமாகஅறிவிப்பதில் மாநில அரசு அதிக கெடுபிடிகளை மேற்கொள்ளவேண்டாம்-சென்னை ஐகோர்ட்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழை முதல்பாடமாகஅறிவிப்பதில் மாநில அரசு அதிக
கெடுபிடிகளை மேற்கொள்ளவேண்டாம் என்று சென்னை ஐகோர்ட்அறிவுறுத்தியுள்ளது.
2006ம் ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு, தமிழ்கற்பிப்பு சட்டத்தின் கீழ் தீர்மானம்
இயற்றியது. அதனடிப்படையில்,மாநிலத்தில் உள்ள அனைத்து (ஸ்டேட் போர்டு மற்றும் மெட்ரிகுலேசன் ) பள்ளிகளிலும்தமிழ் கட்டாயம் முதல் மொழியாக இருக்க வேண்டும்என்று உத்தரவிட்டது.
நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் மற்றும் கேந்திரியா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகள், இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி சஞ்சய் கிஷன் மற்றும் புஷ்பா சத்யநாராயணா பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
ஸ்டேட் போர்டு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ் மொழியை முதல்பாடமாக அறிவிப்பதில் அரசு
கெடுபிடி மேற்கொள்ள வேண்டாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.மாணவர்களின் விருப்பதிற்கேற்ப முதல் மொழியை தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள்
அறிவுறுத்தியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக