செவ்வாய், 17 மே, 2016

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 91.4% ஆக உயர்வு

பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.4%.

கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2014, 2015 ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.6% ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.4% ஆக அதிகரித்துள்ளது.

மாணவிகளே அதிகம்..

வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களைவிட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 94.4%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.9%. இந்த ஆண்டு மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்:

இயற்பியல் - 5

வேதியியல் - 1,703

உயிரியல் - 775

தாவரவியல் - 20

விலங்கியல் - 10

கணிதம் - 3361

கணினி அறிவியல் - 303

வணிகவியல் - 3084

கணக்குப்பதிவியல் - 4341

பிசினஸ் கணிதம் - 1072

வேதியியல் பாடம் மிகக் கடினமாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அப்பாடத்தில் 1,703 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக